சின்னத்திரை சீரியல்கள் மூலம் சின்னத்திரை மற்றும் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரக்ஷிதா மகாலட்சுமி குடும்பபாங்கான கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவர் சரவணன் மீனாட்சி என்ற தொடர்களில் நடித்ததன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது.
கட்டத்தில் இந்த சிறிய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் குறைக்கப்பட்டதாக அந்த சீரியலில் இருந்து விலகிவிட்டார். தற்பொழுது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சொல்ல மறந்த கதை என்ற சீரியலில் நடித்து வருகின்றார்.
இந்நிலையில் தன்னுடைய கணவரை பிரிந்து கடந்த ஓராண்டாக தனியாக வசித்து வருகிறார் என்ற தகவல் இணையத்தில் வைரல் ஆனது. இது உண்மைதான் என்பது போல ரச்சிதா மகாலட்சுமியின் பேட்டி ஒன்று அமைந்தது.
இந்நிலையில் இவர் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல்கள் இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. அதிலும், பிரபல இயக்குனர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள உள்ளார் என்ற தகவல் தீயாக பரவி வருகின்றது.
இவருடன் எடுத்துக் கொண்டா சில புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் விவாகரத்து செய்யும் செய்திகள் தொடர்ந்து வந்தவண்ணம் இருக்கின்றன.
மேலும் தங்களுக்கு பிடித்த மாதிரியான அடுத்த வாழ்க்கையையும் அமைத்துக் கொள்ளும் விஷயங்களும் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இசையமைப்பாளர் டி.இமான் சமீபத்தில் தனது மனைவியை விவாகரத்து செய்த இரண்டே மாதத்தில் வேறு பெண்ணை மறுமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.