சமீபத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடிகர் சிம்புவுக்கு அம்மாவாக நடித்திருந்தார் நடிகை ராதிகா சரத்குமார். இந்த திரைப்படம் இவரது நல்ல வரவேற்ப்பை பெற்று கொடுத்திருக்கிறது.
80 மற்றும் 90களில் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை ராதிகா நடித்த பிரதாப் போத்தன் திருமணம் செய்துகொண்ட இவர் சில வருடங்களில் அவரை விவாகரத்து செய்தார்.
அதன் பிறகு நடிகர் சரத்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நடிகை ராதிகாவை திருமணம் செய்ய வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக தன்னுடைய முதல் மனைவியை விவாகரத்து செய்தார் நடிகர் சரத்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி நடித்து வரும் கொலை படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். திரில்லர் பாணியில் உருவாகி வரும் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.
இந்நிலையில் இந்த படத்தின் போஸ்டர்கள் சில இணையத்தில் வெளியானது. அதில் ஒன்றில் நடிகை ராதிகா சரத்குமார் சிகப்பு நிற கோட் அணிந்து கொண்டு கையில் சிகரெட்டுடன் அமர்ந்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரல் ஆனது. இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
பல்வேறு தரப்பினர் புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்தும் காட்சிகளை படத்தில் வைப்பதை தவிர்த்து வரும் நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக பலராலும் அறியப்பட்ட நடிகையாக இருக்கும் நடிகை ராதிகா சரத்குமார் இப்படி செய்வது எந்த வகையில் பொருத்தமானதாக இருக்கும் என்று கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
இது ஒரு பக்கம் இருக்க என்னுடைய விடுமுறை நாட்களை குடும்பத்தினருடன் வெளிநாடுகளுக்கு சென்று கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் நடிகை ராதிகா சரத்குமார் சமீபத்தில் நடந்து சென்றபோது உடலோடு ஒட்டிய உடையணிந்து கொண்டு படு கிளாமரான புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டிருக்கிறார்.
முன்னதாக தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை நடிகை ராதிகா சரத்குமார் வெளியிட்டிருந்தார். இது ரசிகர்களை மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இதைத்தொடர்ந்து இந்த புகைப்படத்தை நான் வெளியிடவில்லை யாரோ என்னுடைய தொலைபேசியை ஹேக் செய்து இருக்கிறார்கள் விரைவில் என்னுடைய கணக்கு திரும்பியவுடன் இந்த புகைப்படங்களை அழித்து விடுவேன் என்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார் நடிகை ராதிகா சரத்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.