ரோகிணி : திரை உலகில் எண்ணற்ற வில்லன்கள் வருவதும் செல்வதுமாக உள்ளது எனினும் இந்த வில்லன் நடிகர் ரகுவரன் என்று ஒரு குறிப்பிட்ட பாடி லாங்குவேஜ் உள்ளது.
அந்த வகையில் இவரைப் பின்பற்றி எந்த ஒரு நடிகர்களும் நடிப்பை அவரைப்போல் வெளிப்படுத்த முடியவில்லை. இவர் வில்லனாக நடிப்பதோடு மட்டுமல்லாமல் ஹீரோவாக குணச்சித்திர நடிகராக பல படங்களில் நடித்திருக்கிறார்.
ஹீரோ க்களுக்கு இருப்பது போலவே இவரது வில்லத்தனமான வேடங்களில் பார்ப்பதற்கு என்றே ஒரு கூட்டம் திரையரங்குகளை நோக்கி படையெடுக்கும்.
திரையுலகில் மிகவும் பிரபலமாக ஜொலித்துக் கொண்டு இருக்கும்போதே இவர் நடிகை ரோகிணியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஒன்றாக குடும்பம் நடத்திய இவர்கள் இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள்.
இதனை அடுத்து நீண்ட காலத்துக்குப் பின்னால் இவரது எக்ஸ் மனைவியான ரோகிணிஓரு பேட்டியில் இவரைப் பற்றி சில உருக்கமான விஷயங்களை கூறியிருக்கிறார்.
அதிகமாக குடிக்கும் பழக்கம் ரகுவரனுக்கு இருந்ததால் குடித்துவிட்டு தனது கேரக்டரை எப்படி திரைப்படத்தில் காட்டுகிறாரோ அதை வீட்டில் மீண்டும் ஒருமுறை மெனக்கெட்டு திரும்பத் திரும்ப செய்து பார்க்கக்கூடிய கேரக்டர்.
அவர் தொடர்ந்து வீட்டில் செய்யும் போதுதான் குடும்பத்திற்குள் பிரச்சினை ஏற்பட்டு எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
தன்னை ஒரு சராசரிப் பெண்ணாக தான் தனது வீட்டில் வளர்த்தார்கள் அந்த சராசரி பெண்ணாகவே நான் அவரை கை பிடித்தேன். ஆனால் என் மன வாழ்வு அந்த அளவுக்கு சரியாக இல்லாதது காரணம் அவர் பெரும் குடிகாரராக இருந்தோடு குடித்து விட்டால் நினைவே இல்லாத ஒருவராக செயல்பட்டது தான் விவகாரத்துக்கு காரணம் காரணம் எனக் கூறியது அனைவரையும் நெஞ்சையும் உருக வைத்தது.