மாடர்ன் உடையில் ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி..! – வாயை பிளந்த ரசிகர்கள்..!

திறமை இருக்கும் அனைவர்களும் அனைவருமே விஜய் டிவியில் ஒரு வாய்ப்பு கிடைத்தால் கட்டாயம் வெள்ளி திரையில் ஜொலிப்பார்கள் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில் உள்ளது என கூறலாம்.

விஜய் டிவியில் நடக்கும் சில பிரபலமான சோக்களில் கலந்துகொண்டு சோக்காக நடிக்கச் சென்ற நடிகர் மற்றும் நடிகைகளின் வரிசை ஏராளம் ஏராளம் என்று கூறலாம். அந்த அளவுக்கு திறமையான கலைஞர்களுக்கு ஒரு பிளாட்பார்ம் ஆக இருந்து அவர்களை முன் எடுத்துச் செல்லும் ஊடக வரிசையில் விஜய் டிவி முன்னிலை வகிக்கிறது.

அந்த வரிசையில் இந்த டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தம்பதிகள் தான் செந்தில் மற்றும் ராஜலட்சுமி. இவர்கள் இந்த ரியாலிட்டி ஷோ முழுவதுமே கிராமத்து மண்வாசனையை கொண்டு தரும் கிராமிய பாடல்களையும் நாட்டுப்புறப் பாடல்களையும் பாடி அசத்தினார்கள்.

இந்த பாடும் பாடலைக் கேட்பதற்கு என்றே ஒரு ரசிகர் வட்டாரம் விஜய் டிவியில் உருவாகிவிட்டது என்று கூறலாம். அந்த அளவு தமிழக மக்களின் மனதில் இடம் பிடித்த இவர்கள் சூப்பர் சிங் 6 சீசனில் கலந்து கொண்டு பிரபலம் ஆகி முதல் பரிசை தட்டிச் சென்றவர்கள்.

இதனை அடுத்து திரைப்படங்களில் பாடக்கூடிய வாய்ப்பும், நடிக்க கூடிய வாய்ப்பு இருவருக்கும் சம அளவு வந்து சேர்ந்ததில் செந்தில் தனது நடிப்புத் திறனை ஒரு படத்தில் காட்டியும் அது பிரயோஜனம் இல்லாமல் தோல்வியை சந்தித்தார்.

இதனை அடுத்து புஷ்பா பாடல் மூலம் அனைவரும் மனதையும் கட்டி போட்டு வைத்த ராஜலக்ஷ்மி தற்போது ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க இருப்பதால் இவரும் நயன்தாராவை போல உடையணிந்து காட்சி அளிக்கின்ற புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளிவந்து வைரலாகி விட்டது.

இந்தப் படத்தின் பெயர் சைலென்ஸ் என்பதாகும் இந்தப் படத்தின் ஃபாஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை ஈர்த்தது என்று கூறலாம். அது மட்டுமல்லாமல் சினிமாவில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர்கள் தற்போது தங்களுக்கு என ஒரு யூடியூப் சேனல் மட்டுமல்லாமல் தனது மாமியாருக்கும் ஒரு யூடியூப் சேனலை ஆரம்பித்து அதிலும் கல்லா கட்டி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …