ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஆகிய ஐஸ்வர்யா தனுஷை திருமணம் செய்து தற்போது இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள். திருமணம் ஆவதற்கு முன்பே இவர் இயக்குனராக செயல்பட்டிருக்கிறார்.
அந்த வரிசையில் தனுஷ் நடித்த 3 கௌதம் கார்த்திக்கை வைத்து வை ராஜா வை போன்ற படங்களை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியிருக்கிறார்.
திரைப்படங்கள் மட்டுமல்லாமல் இவர் மிகச் சிறப்பாக மியூசிக் ஆல்பங்களையும் வெளியிட்டு இயக்கியிருக்கிறார்.
தனுசை பிரிந்த பிறகு இவர் இந்தியில் ஓ சாதி சால் என்ற படத்தை இயக்கப் போவதாக செய்திகள் வெளிவந்தது. அதன் பின் அந்த செய்திகளுக்கு உரிய பதில் இதுவரைக்கும் கிடைக்கவில்லை. இவர் அந்தப் படத்தை இயக்கப் போகிறாரா இல்லையா என்பது இதுவரை கிணற்றில் போடப்பட்ட கல்லாக தான் உள்ளது.
இதைத்தொடர்ந்து தற்போது லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் விரைவில் ஒரு படத்தை ஐஸ்வர்யா ரஜினி இயக்கப்போவதாக பரபரப்பான தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த படமும் வித்யாசமான கதை அம்சத்தோடு இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது என்று பலர் பேசிக் கொள்கிறார்கள்.
மேலும் எந்த படத்திற்கான பூஜை வரும் நவம்பர் மாதம் நடை பெறலாம் என்று அதிகாரபூர்வமான வட்டாரங்களில் இருந்து செய்திகள் வந்திருக்கிறது.
இப்படத்தில் தான் நம் தலைவர் ரஜினிகாந்த் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்க போக உள்ளதாகவும் தெரிகிறது இதை அடுத்து மகளிர் இயக்கத்தில் அப்பா என்று கோடம்பாக்கம் முழுவதும் ஒரே பேச்சாக உள்ளது.
இதனையடுத்து இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு பட பூஜையின் போது விடப்படும் என தெரிகிறது.
இந்த திரைப்படம் எப்போது திரைக்கு வரும் என ரஜினிகாந்த் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.மகள் இயக்கத்தில் அப்பா நடிப்பது இதுவே திரையுலக வரலாற்றில் முதல் முறையாக இருக்கும் என்று அனைவரும் பேசிக் கொள்கிறார்கள்.
இது எந்த படம் மிகப்பெரிய வெற்றியை ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு தரவேண்டும் என்று ரசிகர்கள் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.