லைக்கா நிறுவனம் ரஜினியை வைத்து பல கோடி பிசினஸ் சா? ரகசியம் என்ன?

 தற்போது சுபாஷ்கரின் லைக்கா நிறுவனம் ரஜினி குடும்பத்தாருக்கு மிக நெருக்கமானவராக மாறிவிட்டார். இதனை அடுத்து தான் அடுத்தடுத்த தயாரிப்புகளில் படுபிஸியாக மாறி இருக்கும் அந்த நிறுவனம் ரஜினியை வைத்து ஒரு திரைப்படத்தை தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறது.

மேலும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளிவரக்கூடிய நிலையில் அதற்கான வேலைகள் மிக வேகமாக நடந்து வருகிறது.

 அதுமட்டுமல்லாமல் ரஜினியின் மூத்த மகளாகிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஐ வைத்து ஒரு படத்தை இயக்க திட்டமிட்டு இருக்கும் லைக்கா நிறுவனம் தற்போது ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யாவையும் விட்டு வைக்கவில்லை.

 சௌந்தர்யாவுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை யோசித்து  சௌந்தர்யா ரஜினிகாந்த் நடத்தும் மருந்து கம்பெனிக்கு கிட்டத்தட்ட 500 கோடிக்கு மேலான ஒப்பந்தத்தை லைக்கா நிறுவனம் தற்போது கொடுத்திருக்கிறது.

 இதனை அடுத்து மாப்பிள்ளைகளை மட்டும் விட்டு வைத்து விட்ட லைக்கா நிறுவனம் ரஜினி குடும்பத்தாருக்கு நெருங்கிய பிசினஸ் பார்ட்னர் போல் செயல்பட்டு வருவது திரை உலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்த வைத்துள்ளது.

 அதுமட்டுமல்லாமல் லைக்கா நிறுவனம் ரஜினிகாந்த் குடும்பத்தை வாழ வைக்கிறதா? அல்லது ரஜினிகாந்த் குடும்பம் லைக்காவை வாழ வைக்கிறதா? என்ற கேள்வியை தற்போது எழுப்பி விட்டது. மேலும் இவர்கள் தற்போது இணைந்திருக்கும் இந்த கூட்டணிகள் ஏதோ ஒரு வித ரகசியம் உள்ளது.

 அது விரைவில் தெரியவரும் என்று திரையுலக பிரபலங்கள் அனைவரும் பேசி வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் லைக்காவின் டார்கெட் ரஜினிகாந்த் தான் என்று கோலிவுட் வட்டாரம் கூறி உள்ளது.

 தற்போது ரஜினிகாந்த் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வரக்கூடிய வேலையில் அடுத்த படத்தில் நடிப்பதற்காக லைக்கா நிறுவனத்தோடு இணைந்து இருப்பதை அறிந்து ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

 எனவே விரைவில் லைக்கா நிறுவனத்திற்கும் ரஜினி குடும்பத்திற்கும் இடையே உள்ள அந்த ரகசிய முடிச்சுகள் என்னென்ன என்பது விரைவில் அவிழும்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …