கடலூரில் மாஸ் காட்டிய ஜெயிலர் பட நாயகன் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்…!

 டாக்டர், கோலமாவு கோகிலா போன்ற படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ஜெயிலர் படத்தை இயக்கி வருகிறார்.

 இந்த படத்திற்கான படப்பிடிப்பு கடந்த மாதம் முழுவதும் சென்னையிலுள்ள ஈசிஆர் பகுதியில் நடைபெற்றது. அடுத்து இதன் அடுத்த கட்ட படப்பிடிப்புகள்  தற்போது கடலூரில் நடைபெற்று வருகிறது.

 கடலூர் மாவட்டத்தில் உள்ள நத்தம் பகுதியில் இந்தப் படத்திற்கான சண்டைக்காட்சிகள்  மற்றும் யோகி பாபு நடித்த சில காட்சிகள் படம் பிடிக்கப்பட்டது.

இதனை அடுத்து  ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு ரஜினிகாந்த் வந்தபோது நத்தம் பகுதியில் இருக்கக்கூடிய பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு இவரை வரவேற்று இருக்கிறார்கள்.

 வழக்கம் போல் ரஜினிகாந்த் காரைவிட்டு இறங்கி வரும்போது ரசிகர்களை வணங்கிவிட்டு உற்சாகமாக கையை காட்டிய நிலையில்தான் ஷூட்டிங்கில் பங்கேற்று இருப்பதாக கூறுகிறார்கள்.

 இந்த படத்தின் இயக்குனரான நெல்சன் திலீப் குமாரும் உயரமான இடத்திலிருந்து ரசிகர்களை நோக்கி கையசைத்து வணக்கம் தெரிவித்து நன்றியை தெரிவித்திருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.

 நீண்ட இடைவெளிக்கு பின்னர் ரஜினியுடன் இணைந்து ரம்யாகிருஷ்ணன் இந்த படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதுபோல நடிகை தமன்னா ஷவ்ராஜ்குமார், வசந்த் ரவி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருப்பதால் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை கிளப்பி இருக்கிறது.

மேலும் இந்த படம் திரைக்கு எப்போது வரும் என்ற ஆர்வத்தில் ரசிகர்கள் அனைவரும் திரண்டு ரஜினியை ஆரவாரம் படுத்திய விதம் மிகவும் அருமை என்று கூறுகிறார்கள்.

 மேலும் இந்த வயதிலும் இத்தனை சுறுசுறுப்போடு தலைவர் நடந்து வருவதை பார்த்த ரசிகர்கள் மிகவும் உற்சாகம் அடைந்து இருக்கிறார்கள்.

சூப்பர் ஸ்டாரின் நடை மற்றும் உடையை பார்த்து அசர கூடிய ரசிகர்கள் அவரது சுறுசுறுப்பையும் பாலோ பண்ணினால் மிகவும் சிறப்பாக இருக்கும் என்று கூறுகிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …