கர்ணன் திரைப்படத்தில் பாவாடை தாவணி சகிதமாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பசுமரத்தாணி போல பதிந்து விட்டார் நடிகை ரஜிஷா விஜயன். சமீபத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் எந்த திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இன்றைய இளம் சினிமா ரசிகர்கள் மத்தியில் கனவு கன்னியாக வலம் வரும் ரஜிஷா விஜயன் ஃபைனல் என்ற விளையாட்டை மையமாக வைத்து உருவான திரை படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது கர்ணன் படத்தை கர்ணன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததாக கூறுகிறார்.
கர்ணன் கதை கேட்டவுடன் கதை நடக்கும் இடம் கிராமம் மற்றும் கிராமம் சார்ந்த பகுதி என்பதால் எனக்கு மிகவும் பிடித்துப் போனது. இப்படியான கதாபாத்திரங்களில் இப்படியான பின்னணியில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய ஒரு ஆசையாக இருந்தது.
அந்த ஆசை இந்த படத்தின் மூலம் நிறைவேறியது என கூறினார் இந்த படத்தில் நடிக்கும்போது எனக்கு எந்த ஒரு இடையூறும் இருக்கக்கூடாது. நான் நடிப்பது போல இருக்கக் கூடாது என்பதால் அந்த படப்பிடிப்பு நடைபெறும் ஊருக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பே சென்று தங்கி இருந்தேன்.
அந்த மக்களுடன் பேசி பழகினேன் அந்த ஊர்க்காரியாகவே நான் ஓரிரு நாட்களில் மாறிவிட்டேன். இது இந்த படத்தில் என்னுடைய தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்த உறுதுணையாக இருந்தது.
தொடர்ந்து இப்படியான படங்களில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை என்று கூறியிருந்தார். சினிமாவில் குடும்ப குத்து விளக்காக தோன்றும் இவர் இன்ஸ்டாகிராம் மற்றும் சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சி ராணியாக வலம் வந்து கொண்டிருக்கின்றார்.
தன்னுடைய இணையப் பக்கங்களில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது மாடர்ன் உடையில் வெளியிட்டுள்ள சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கர்ணன் படத்தில் தாவணி பாவாடை சகிதமாக நடித்த ரஜிஷா விஜயனா இது..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.