“அப்பப்பா… எம்புட்டு அழகு.. பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே..” – கிறங்க வைக்கும் ரஜிஷா விஜயன்..!

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படம் பட்டிதொட்டியெங்கும் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. இந்த படத்தின் கதை உண்மையில் நடந்த ஒரு கதையின் தழுவல் என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிரி கிடந்தது.

இந்த எதிர்பார்ப்பை அப்படியே பூர்த்தி செய்து இருந்தார் இயக்குனர் மாரி செல்வராஜ். இந்த படத்தின் ஹீரோயினாக நடித்து இருந்தவர் நடிகை ரஜிஷா விஜயன். இந்த படத்தின் வாய்ப்பு இவருக்குக் கிடைத்த பொழுது இப்படியான ஒரு கதைகள் தான் நான் நடிக்க காத்துக் கொண்டிருந்தேன்.

ஆனால் நான் நகரத்தில் பிறந்து வளர்ந்த பெண் கிராமத்தில் எப்படி பழக வேண்டும் எப்படி இருக்க வேண்டும் என்று எனக்கு தெரியாது என்ற காரணத்தினால் கதையின் படப்பிடிப்பு நடக்க இருந்த அந்த கிராமத்திற்கு படப்பிடிப்பு துவங்கும் 10 நாட்களுக்கு முன்பே சென்று தங்கி அங்கே இருந்த மக்களுடன் கலந்துரையாடி அவர்களுடன் பழகி என அந்த கிராமத்து பெண்ணாகவே மாறி இருக்கிறார்.

இதனால் இவருடைய கதாபாத்திரத்தில் இவர் மிகவும் பொருந்தி வந்தார். இதனை ஒரு பேட்டியில் அவரே கூறியிருந்தார். கேரளாவைச் சேர்ந்த இவர் ஆரம்பத்தில் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான அனுரக கரிக்கின் என்ற திரைப்படத்தில் இவருடைய நடிப்பை வெளிப்படுத்தி அதற்கு சிறந்த நடிகைக்கான கேரள அரசின் மாநில விருதை பெற்று அசர வைத்தார்.

கர்ணன் திரைப்படத்தில் தொடர்ந்து நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். திரைப் படங்களில் குடும்பப்பாங்கான நடித்தாலும் கூட இணைய பக்கங்களில் கவர்ச்சி கன்னியாக வலம் வந்து கொண்டு இருக்கிறார் அம்மணி.

அந்த வகையில், நம்முடைய புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை பகிர்ந்திருக்கிறார். கவர்ச்சியான உடையில் தேவதை போல இவரும் இவருடைய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …