என்ன சொல்றீங்க..? ரம்பா-வா இது..? ஆள் அடையாளம் தெரியாமல் மாறிட்டாரே..!

நடிகை ரம்பா அழகிய லைலா அது இவளது ஸ்டைலா… அடடா பூவின் மாநாடோ.. ஓ…ஓ.. என அழகு பதுமையாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர்.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களான நடிகர் ரஜினிகாந்த் அஜீத் விஜய் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள நடிகை ரம்பா கடந்த 2010ஆம் ஆண்டு கனடாவைச் சேர்ந்த தொழிலதிபரும் தனது நண்பருமான இந்திரகுமார் பத்மநாபன் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார்.

அதன் பிறகு சினிமாவில் நடிப்பதை தவிர்த்துவிட்டார். இவருக்கு 2 மகள் மற்றும் ஒரு மகன் என மொத்தம் மூன்று குழந்தைகள் உள்ளனர்.

சினிமாவில் நடிப்பது தவிர்த்தாலும் தற்போது சின்னத்திரையில் ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக மிகவும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அவ்வப்போது ரசிகர்கள் மத்தியில் தோன்றுகின்றார்.

கடைசியாக கடந்த 2011 ஆம் ஆண்டு மலையாளத்தில் பிலிம் ஸ்டார் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். சஞ்சீவி ராஜா இயக்கிய இந்த படத்தில் திலீப் மற்றும் கலாபவன் மணி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

அதன்பிறகு சில சொந்த காரணங்களுக்காக சென்னையில் வசித்து வந்த நடிகை ரம்பா அதன் பிறகு தன்னுடைய புகுந்த வீடான கனடாவிற்கு பறந்துவிட்டார்.

அங்கிருந்தபடி அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ரம்பா இது நம்பவே முடியலையே ஆள் அடையாளம் தெரியாமல் மாறி என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …