கடந்த 1984ஆம் ஆண்டு நடிகர் ஒய் ஜி மகேந்திரனுக்கு ஜோடியாக வெள்ளை மனசு என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தவர் நடிகை ரம்யாகிருஷ்ணன். இந்த படத்தில் நடிக்கும் போது இவருக்கு வயது வெறும் 14 தான்.
பரதநாட்டிய அரங்கேற்றம் செய்த நிகழ்வில் புகைப்படங்கள் வெளியானது மூலம் ரம்யா கிருஷ்ணனுக்கு படவாய்ப்புகள் வந்தன. தொடர்ந்து பல முன்னணி இயக்குனர்களின் படங்களில் கதாநாயகி தேர்வு என்று கூறப்படும் ஆடிஷனில் கலந்துகொண்டு ரம்யா கிருஷ்ணன் கடைசியாக வெள்ளை மனசு என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.
மறைந்த அரசியல் விமர்சகரும் நடிகருமான சோ ராமசாமியின் உறவினர் நடிகை ரம்யா கிருஷ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது. படையப்பா திரைப்படம் வெளியான பிறகுதான் நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்தது என்று கூறலாம்.
அதற்கு முன்பே அம்மன் என்ற திரைப்படத்தில் அம்மனாக தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை ரம்யாகிருஷ்ணன். பல மொழிகளில் நடித்து வரும் ரம்யா கிருஷ்ணன் தற்போது பட வாய்ப்புக்காக எந்தளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறார்.
எண்பதுகளில் நடித்த நடிகைகள் எல்லாமே எந்த மொழியிலும் நடித்தாலும் அந்த மொழியில் வேறு நபர்களை வைத்து தான் டப் செய்தார்கள். ஆனால் தன்னுடைய சொந்தக் குரலில் தமிழில் பல முறை டப் செய்து இருக்கிறார் நடிகை ரம்யா கிருஷ்ணன்.
படையப்பாவில் நடித்த பிறகுதான் அவருடைய குரலுக்கு அங்கீகாரம் கிடைத்தது என்று ரம்யா கிருஷ்ணன் கூறுகிறார். மேலும் 1999ஆம் ஆண்டு வெளியான படையப்பா திரைப்படத்தில் ரஜினிக்கு வில்லியாக நீலாம்பரி என்ற வேடத்தில் நடித்தது தான் என்னுடைய திரை வாழ்க்கையையே மாற்றியது என்று கூறுகிறார்.
தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வரும் நடிகை ரம்யா கிருஷ்ணன் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். நிலையில் சிகப்பு புடவை சகிதமாக படு கிளாமராக நிறுத்தும் நடிகை ரம்யா கிருஷ்ணனின் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை செலுத்தி வருகின்றது.