பிரபல நடிகை ஒருவர் நடிகர் விஜயகாந்த் உடன் நடிக்கவே மாட்டேன் என்று ஓட்டம் பிடித்த சம்பவம் பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம். தென்னிந்திய திரைப்படங்களில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ரம்யா கிருஷ்ணன்.
தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஹிந்தி உள்ளிட்ட பல இந்திய மொழி படங்களில் நடித்திருக்கிறார் 80 மற்றும் 90களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை ரம்யா கிருஷ்ணன்.
தற்பொழுதும் படங்களில் பிஸியாகவே நடித்து வருகிறார். ஒரு கட்டத்தில் இளம் நடிகர்களான சிம்பு, நரேஷ், மகேஷ்பாபு உள்ளிட்டோருடன் குத்தாட்டம் போட்டு பெரும் பரபரப்பை கிளப்பியவர்.
Ramya Krishnan Vijayakanthகவர்ச்சி கதாநாயகியாகவும், குடும்பப்பாங்கனியாகவும் நடிப்பில் வெளுத்து வாங்கிய நடிகர் ரம்யா கிருஷ்ணன் சமீபத்தில் வெளியான பாகுபலி திரைப்படத்தில் ராஜமாதா என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார்.
இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு இந்திய அளவில் பெற்றுக் கொடுத்தது. மட்டுமில்லாமல் ஜெயலலிதா அவர்களின் நிஜ வாழ்க்கையை மையப்படுத்தி வெளியான குயின் என்ற வெப் சீரிஸும் இவருக்கு வெற்றி படமாக அமைந்தது.
Ramya Krishnan Vijayakanthதொடர்ந்து தென்னிந்திய சினிமாவில் பிஸியாக நடித்து வரும் இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் சிறப்பு விருந்தினராகவும் பங்கேற்று வருகிறார். இப்படி பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் ரம்யா கிருஷ்ணன் வாஞ்சிநாதன் என்ற திரைப்படத்தில் நடிகர் விஜயகாந்த் உடன் நடிக்க மறுத்திருக்கிறார்.
இவருக்கு ஜோடியாக நான் நடிக்கவே மாட்டேன் என ஓட்டம் பிடித்திருக்கிறார். ஆனால், படத்தின் இயக்குனர் படத்தின் கதை மற்றும் சில விஷயங்களை தெளிவாக எடுத்து கூறி மீண்டும் நடிகர் ரம்யா கிருஷ்ணன் இந்த படத்தில் நடிகர் விஜயகாந்துக்கு ஜோடியாக நடிக்க வைத்திருக்கிறார் என்று பிரபல பத்திரிகையாளர் செய்யார் பாலு பேட்டி ஒன்றில் பதிவு செய்திருக்கிறார்.
Ramya Krishnan Vijayakanthஇந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது