சீரியர்களுக்கு பஞ்சம் இல்லாத, டிஆர்பி ரேட்டில் முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கின்ற சன் டிவியில் விதி என்ற சீரியலில் தனது எடுப்பான நடிப்பை காட்டி ரசிகர்களை துடிக்க வைத்தவர் ராஷ்மி ஜெயராஜ்.
மேலும் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ராஜபார்வை சீரியலில், சாரு என்ற கேரக்டரில் மிக அற்புதமான முறையில் நடித்தவர். கர்நாடக பெண்ணான இவர் பெங்களூருவில் கல்லூரி படிப்பை முடித்த பிறகு மாடலிங் மூலம் தான் சின்னத்திரையில் நுழைந்து இருக்கிறார்.
இவர் முதல் முதலில் ஜோதே ஜோதேயலி என்ற கன்னட சீரியலில் நடித்து பிரபலமானார். இதை அடுத்துத்தான் இவர் தமிழ் சீரியலில் நடிக்க ஆரம்பித்தார். ஆரம்பத்தில் விதி சீரியல் இவருக்கு அவ்வளவாக நல்ல பெயரை கொடுக்கவில்லை என்றாலும் விஜய் டிவியில் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் செந்திலுக்கு ஜோடியாக நடித்த தாமரை கேரக்டரில் ரசிகர்களின் மொத்த நெஞ்சையும் கொள்ளை அடித்தார்.
இதனை அடுத்து இவர் சன் டிவியில் தெய்வமகள் மற்றும் கன்னடத்தில் உதயா டிவியில் தேவயானி போன்ற தொடர்களில் நடித்து வருகிருக்கிறார். கன்னட மொழியில் ஒளிபரப்பாகி வரும் சரவணன் மீனாட்சி தொடரிலும் இவர் நடித்து வருகிறார்.
தற்போது திருமணம் செய்து கொண்ட இவர் இன்ஸ்டா பக்கத்தில் அவ்வப்போது படு கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மிரள வைப்பார். அந்த வரிசையில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஆச்சரியம் அடைந்திருக்கிறார்கள்.
சின்னத்திரை சீரியல்களில் சிறப்பாக நடித்து வரும் இவருக்கு பெரிய திரையில் வாய்ப்பு கிடைத்தால் கட்டாயம் நல்ல முறையில் செய்வார் என்பதற்கு உதாரணமாக இந்த புகைப்படங்கள் உள்ளது என்று கூறலாம்.
மேலும் படத்துக்குத் தேவை எனில் கவர்ச்சி காட்டவும் தயங்க மாட்டேன் என்று கூறாமல் கூறியிருப்பது போல் தான் இவரது போட்டோக்கள் உள்ளது.இதனை பார்த்து வரும் இளசுகள் அத்தனையும் இந்த போட்டோவுக்கு தேவையான லைக் மற்றும் கமெண்ட் போட்டு இருக்கிறார்கள். இதனை அடுத்து விரைவில் இவருக்கு பட வாய்ப்புகள் வந்து வாயில் கதவை தட்டும் என்று சொல்லாமல் சொல்லி இருக்கிறார்கள்.