ராஷ்மிகா மந்தனா இவர் கன்னட சினிமாவில் புகழ் பெற்ற நடிகையாக வலம் வருகிறார். இவரது சொந்த ஊரான குடகு மாவட்டத்தின் விராஜ் பேட்டையில் குடவ குடும்பத்தில் பிறந்தவர்.
இவர் கன்னட படமான கிரிக் பார்ட்டி என்ற படத்தின் மூலம் முதல்முறையாக கன்னட சினிமாவிற்கு அறிமுகமானார். இதில் இவருடைய நடிப்பு பெரிதாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் கன்னட சினிமாவில் ஒரு குறிப்பிட்ட அங்கீகாரத்தை பெற்ற இதற்காக சைமா விருதுகளையும் பெற்றார்.
பிறகு 2018 ஆம் ஆண்டு விஜய் தேவர் கொண்டா நடிப்பில் வெளியான கீதா கோவிந்தம் என்ற படத்தின் மூலம் இவர் தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களை தனது வசம் கவர்ந்தார். இந்த படத்தின் மூலம் இந்திய மொழிகளான தமிழ் ஹிந்தி தெலுங்கு என்ற மூன்று மொழிகளிலும் பிரபலமானார்.
பிறகு 2022 ஆம் ஆண்டு வெளியான புஷ்பா படத்தின் மூலம் முன்னணி நடிகைகளின் முக்கியமான ஒருவராக திகழ்ந்தார். இந்த படம் இவருக்கு மிகப்பெரிய ஒரு மையில் கல்லாக இந்திய சினிமாவில் இருந்தது. பிறகு தமிழ் திரைப்படங்களில் முன்னணி நடிகர்களாக திகழ்ந்து வருபவர் விஜய், இவருடன் 2023 ஆம் ஆண்டு வெளியான வாரிசு என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை தனது கொள்ளை அழகினால் கொள்ளையடித்தார்.
இப்பொழுது பாலிவுட்டிலும் இவருக்கு வாய்ப்பு குவிந்த வண்ணம் உள்ளது. இவர் தற்போது சமூக வலைதளங்களில் நிறைய போட்டோக்களை பதிவேற்றம் செய்து வருகிறார்.போட்டோக்கள் மற்றும் அல்லாமல் நிறைய வீடியோக்களையும் பதிவு செய்து வருகிறார்.
View this post on Instagram
அதில் தற்போது வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் ஒரு குழந்தையை கொஞ்சுவது போல் வீடியோ எடுத்து தன்னை இன்ஸ்டாகிராம் பதிவில் பதிவிட்டுள்ளார். இது பார்க்கவே அவ்வளவு க்யூட்டாக இருக்கிறது.