நடிகை ராஷ்மிகா மந்தனா ( Rashmika Mandanna ) வெளியிட்டு இருக்கக்கூடிய சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. கிரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகத்திற்குள் அறிமுகமான நடிகை ராஷ்மிகா மந்தனா நடிகர் விஜய் தேவார கொண்டாவுக்கு ஜோடியாக கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தில் நடித்தார்.
இந்த திரைப்படத்தில் நடித்த பிறகு இன்டர்நேஷனல் கிரஷ் என்று ரசிகர்களால் அறியப்பட்ட நடிகர் ராஷ்மிகா மந்தனா-வுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டிருக்கின்றன.
தெலுங்கில் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்த ராஷ்மிகா மந்தனா தமிழிலும் காலடி எடுத்து வைத்திருக்கிறார். அதன் வகையில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு உள்ளிட்ட திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார்.
Rashmika Mandannaகுறிப்பாக வாரிசு திரைப்படத்தில் ஹீரோயினுக்கான இடமே இல்லாத போதும் நடிகர் விஜய்க்காக அந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டு நடித்தேன் என்று கூறியிருந்தார் நடிகை ராஷ்மிகா மந்தனா என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தாலும் இவரை சுற்றி ஒரு சர்ச்சை வளையமும் இருந்து கொண்டே இருக்கிறது. சமீபத்தில் கர்நாடக திரையுலகிரனுடன் இவருக்கு ஏற்பட்ட மோதல் போக்கு இன்னும் நீடித்து வருகிறது.
Rashmika Mandannaமறுபக்கம் நடிகர் விஜய் தேவார கொண்டவை இவர் காதலித்து வருவதாகவும் அவரையே விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
Rashmika Mandannaஉச்சகட்டமாக மாலத்தீவில் ஒரே நீச்சல் குளத்தில் கும்மாலம் போடும் இவருடைய புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது. ஆனால், இருவரும் தனித்தனியான புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார்கள் என்றாலும் கூட இரண்டு புகைப்படங்களின் பின்புறத்தை ஆராயும் பொழுது அந்த இரண்டு புகைப்படங்களும் ஒரே இடத்தில் எடுக்கப்பட்டது என தெரியவந்தது.
Rashmika Mandannaஇதனால் இவர்களுடைய காதல் கிசு என்பது உண்மையாகத்தான் இருக்கும் போல என்று ரசிகர்கள் யூகித்திருக்கிறார்கள். என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Rashmika Mandannaஇந்நிலையில் தன்னுடைய அங்க அழகுகல் ரசிகர்களின் கண்களுக்கு தெரிவதை உறுதிப்படுத்தும் விதமாக கவர்ச்சியான உடை அணிந்து கொண்டு போஸ் கொடுத்திருக்கும் ராஷ்மிகா மந்தனாவின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.