தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் இவர் தமிழ் சினிமாவிலும் தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். அதன் பிறகு நடிகர் விஜய் நடிப்பில் உருவாகிவரும் வாரிசு படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
இந்த படத்தில் இன்னும் இரண்டு சண்டைக் காட்சிகள் மற்றும் ஒரு பாடல் காட்சி மட்டுமே படமாக்க வேண்டியுள்ளது. விரைவில் படப்பிடிப்பு பணிகள் முடியும் என தெரியவருகிறது.
பொங்கல் அன்று கண்டிப்பாக இந்த திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நாளில்தான் நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படமும் வெளியாகும் என கூறுகிறார்கள். கடைசி நேரத்தில் ஏதாவது ஒரு படம் பின் வாங்கலாம் என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
இது ஒரு பக்கம் இருக்க நடிகை ராஷ்மிகா மந்தனா தன்னுடைய இணையப் பக்கங்களில் சமீபகாலமாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், தங்க நிற ப்ரா ஒன்றை அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகும் பின்னழகும் பளிச்சென கண்களுக்கு தெரிய போஸ் கொடுத்திருப்பது புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.