என்ன இப்படி அடிச்சுகிறாங்க..! – ராஷ்மிகா மந்தனா, மாளவிகா மோகனன் இடையே மூண்ட குடுமிபிடி சண்டை..!

தமிழ் மக்களால் முன்னணி நடிகராக கொண்டாடப்படும் சியான் விக்ரம் தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறார்.இவர் நடிப்பில் வெளிவந்த கோப்ரா படம் மற்றும் பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்ய கரிகாலன் ஆக நடித்து தன் நடிப்பை மேலும் மெருகூட்டும் வகையில் அனைவர் மத்தியிலும் காட்டியிருந்தார்.

கிட்டத்தட்ட கமலஹாசனை போலவே இவர் நடிப்புக்காக தன் உடலை ஏற்றுவது குறைப்பது மொட்டை போடுவது என்று தன்னை வருத்திக்கொண்டு அந்த கேரக்டராகவே மாறி விடக் கூடிய தன்மை கொண்டவர்.

பொன்னியின் செல்வன் மாபெரும் வெற்றியை அடுத்து இவர் இயக்குனர் பா ரஞ்சித் உடன் இணைந்து ஒரு படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். சியான் விக்ரமின் 61 ஆவது படமாகும். இந்த படத்திற்கு தங்கலான் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல்ராஜா தயாரித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் துவங்கியது.மேலும் இந்த படத்தில் கலையரசன் ஆர்யா சிவகுமார் நடன இயக்குனர் சாண்டி ஆகியோர் இந்த பூஜையில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

ஆரம்பத்தில் இந்தப் படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால், திடீரென ராஷ்மிகாவுக்கு பதிலாக தற்போது விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்த மாளவிகா மோகன் நடிக்க இருக்கிறார் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ராஷ்மிகா மந்தனாவின் இடத்தை விஜய் பட நாயகி அழகாக தட்டி தூக்கி இருப்பதாக திரைத்துறை வட்டாரங்கள் முணுமுணுக்கின்றது. மேலும் ராஷ்மிகா மற்றும் மாளவிகாவுக்கு இதன்மூலம் கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளதாக திரைத்துறை வட்டாரங்கள் கூறுகின்றனர்.

ஏற்கனவே, நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான் சுல்தான் திரைப்படத்தில் மாளவிகா மோகனன் அவருக்கு ஜோடியாக நடிப்பதாக இருந்தது. ஆனால், திடீரென ராஷ்மிகாவுக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது.

தற்போது, ராஷ்மிகா நடிக்கவிருந்த படத்தில் மாளவிகா மோகனன் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த குடுமி பிடி சண்டையை பார்த்த ரசிகர்கள், என்ன இப்படி அடிசுகிறாங்க..? என்று புலம்பி வருகின்றனர்.

இந்த போட்டியின் மூலம் தனது நடிப்புத் திறனை அதிக அளவில் வெளிப்படுத்தக்கூடிய நடிகை யார்..? என்பதற்கு விரைவில் விடை தெரிந்து விடும்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …