கர்நாடகா மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர் ராஷ்மிகா மந்தனா. இவர் கடந்த 2016-ம் ஆண்டு தனது தாய்மொழியிலேயே ‘கிரிக் பார்ட்டி’ என்ற படத்தில் மூலம் அறிமுகமானார்.
இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழில் வெளிவந்த கீதா கோவிந்தம் படத்தின் மூலம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரைவேற்பை பெற்றது. சமீபத்தில் இவர் நடித்த ’புஷ்பா’ படத்தில் வெளிவந்த ஏ சாமி ஏ சாமி என்ற பாடல் பட்டி தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பியது.
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ராஷ்மிகா அவர் செய்யும் சின்ன சின்ன சேட்டைகள் கூட ரசிகர் மனதில் பெரிய அளவில் இடம்பிடித்துள்ளது.
அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன் தளபதி 66 படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். அப்போது படத்திற்கான பூஜை நடந்த போது விஜய்க்கு திருஷ்டி கழித்தது செம்ம வைரலானது.
இந்நிலையில் நடிகை ராஷ்மிகாவின் சம்பளம் பற்றிய தகவல் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது. புஷ்ப படத்தின் வெற்றியை அடுத்து தற்போது ஒரு படத்தில் நடிக்க 3 கோடி சம்பளம் வாங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
View this post on Instagram
இந்நிலையில், நான் நீரின் குழந்தை என கூறிக்கொண்டு நீச்சல் உடையில் சகலமும் தெரிய ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார் அம்மணி.