உச்சகட்ட கவர்ச்சிக்கு இறங்கிய ரஷ்மிகா மந்தனா புகைப்படம்

தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் தற்போது உள்ள உச்ச நட்சத்திர நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வரும் முன்னணி நடிகை ரஷ்மிகா மந்தனா அவர்கள் கர்நாடகா மாநிலம் ராஜ் பேட்டையில் 1996 ஏப்ரல் ஐந்தாம் தேதி பிறந்தவர்.

இவர் கர்நாடக மாநிலத்தில் உள்ள குடகு மாவட்டத்தின் விராஜ் பேட்டையில் கொடுவா குடும்பத்தில் பிறந்தவர். குடகு மாவட்டத்தில் உள்ள  பப்ளிக் ஸ்கூல் ஒன்றில் தனது பள்ளி படிப்பை முடித்த ராஷ்மிகா மந்தனா அவர்கள் ஊடகவியல் மற்றும் இங்கிலீஷ் லிட்ரேச்சர் ஆகியவற்றில் எம் எஸ் ராமையா காலேஜ் ஆஃப் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் என்ற கல்லூரியில் தனது பட்டப் படிப்பை முடித்தார்.

2016 ஆம் ஆண்டு கர்நாடக திரையுலகத்தில் கிரிக் பார்ட்டி என்ற படத்தில் முதன் முதலாக கதாநாயகியாக நடிக்க தொடங்கினார். இந்த படம் கன்னடத்தில் உலகத்தில் மிகப்பெரிய வசூல் சாதனையை நிகழ்த்திய படமாகும் இந்த படத்திற்காக பெஸ்ட் அறிமுக நடிகை என்ற விருதை சைமா அவார்ட்ஸ் பெற்றார்.

அதன் பிறகு 2017 ஆம் ஆண்டு அஞ்சனி புத்ரா என்ற படத்தின் மூலம் கர்நாடக திரையுலகத்தில் அனைவருக்கும் தெரிந்த நடிகையாக மாறினார் அதை ஆண்டு வெளியான தமக் என்ற கன்னட படத்தில் கதாநாயகியாக நடித்தார் இந்த படத்திற்காக சிறந்த நடிகை என்ற விரதை பிலிம்பேர் அவார்ட்ஸ் பெற்றார்.

2018 ஆம் ஆண்டு விஜய் தேவரகொண்டா உடன் கதாநாயகியாக நடித்து வெளிவந்த கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் மலையாளம் தெலுங்கு கன்னடம் என தென்னிந்திய திரைப்படத் துறையின் அனைவரும் கவனிக்கும் வண்ணம் முக்கிய கதாநாயகியாக மாறினார் .அதன்பின்பு மகேஷ்பாபு அவர்கள் நடிப்பில் தெலுங்கில் வெளியான  சரியேறும் நீக்கு வேறு என்ற தெலுங்கு படத்தில் நடித்ததன் மூலம் தெலுங்கு திரை உலகிலும் முன்னணி நடிகையாக மாறினார்.

மேலும் அதே ஆண்டில் பீஷ்மா என்ற தெலுங்கு படத்தில் நடித்தார் அதன்பின்பு போகரு என்ற படம் இவருக்கு தெலுங்கில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்தது. அதன் பிறகு தமிழில் நடிகர் கார்த்தி உடன் சுல்தான் என்ற படத்தில் நடித்தார் இந்த படமே இவர் தமிழில் அறிமுகமான முதல் திரைப்படம் ஆகும்.

அதன் பின்பு pan  இந்திய லெவலில் தயாரிக்கப்பட்டு  தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் ஹிந்தி என்று பல்வேறு மொழிகளில் ரிலீசான புஷ்பா என்ற படத்தில் அல்லு அர்ஜுன் உடன் ஜோடியாக நடித்தார் இந்த படம் மிகப்பெரிய ஹிட் அடித்த நிலையில் இந்த படத்தின் பாடல்களும் இந்திய அளவில் மிகப்பெரிய  பேசுபொருளானது.

அதன் பின்பு தமிழில் உச்ச நட்சத்திரமான விஜயுடன் வாரிசு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் முக்கிய கதாநாயகிகளுக்கு மிகப்பெரிய போட்டியாக வந்து உள்ளார் நடிகை ராஷ்மிகா மந்தனா அவர்கள். மேலும் அவர் தற்போது தயாரிப்பில் இருக்கும் புஷ்பா 2 என்ற படத்திலும் கதாநாயகியாக நடித்த வருகிறார். இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் இது அவர்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது இது போன்ற சுவாரசியமான சினிமா தகவல்களை தெரிந்து கொள்ள தமிழக இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …