இதனால் தான் கமல்ஹாசனுடன் நடிக்கவில்லை..! – உண்மையை போட்டு உடைத்த நடிகை நதியா..!

எவர்கிரீன் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை நதியா. இவருடைய வயது கூட கூட இவருடைய அழகும் கூடிக் கொண்டேதான் போகிறது. இவருடைய இளமையின் ரகசியம் என்ன என்று கேட்டு அவரை நச்சரிக்காத ரசிகர்களே இல்லை என்று கூறலாம். 80’களில் தமிழ் சினிமா ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் இவருடைய உண்மையான பெயர் ஜரினா மொய்டு என்பதாகும்.

இவர் நடித்த முதல் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. மலையாளத்தில் நோக்கிதா டோரது கன்னும் நட்டு என்ற படத்தில் அறிமுகமானார். இந்த படத்தில் இவருடைய கதாபாத்திரத்தின் பெயர் நதியா. இந்த படம் இவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தால் தன்னுடைய பெயரை நதியா என்று மாற்றிக் கொண்டார்.

இந்த படத்தை இயக்குனர் பாசில் இயக்கியிருந்தார். மோகன்லால் மற்றும் பத்மினி உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இந்த திரைப்படத்தை தமிழில் பூவே பூச்சூடவா என்று பெயரிட்டு ரீமேக் செய்தனர். இந்த திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இப்படி தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிய குவிய குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார் நடிகை நதியா.

அந்த காலத்தில் நடிகை நதியாவின் பெயர்தான் ஒரு பிராண்ட் ஆக இருந்தது. நதியா கொண்டை, நதியா பொட்டு, நதியா ஜடை, நதியா செருப்பு, நதியா புடவை என நதியாவின் பெயரையே பெண்கள் உபயோகிக்கும் அழகு சாதனப் பெயர்களுக்கும் நதியாவின் பெயரை பிராண்டாக பயன்படுத்த ஆரம்பித்தனர்.

அந்த அளவுக்கு நடிகை நதியா தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்தார். திருமணமாகி செட்டில் ஆகி விட்ட அவரை மீண்டும் சினிமாவில் நடிக்க அழைத்து வந்தார் பிரபல இயக்குனர் ஜெயம் ராஜா.

நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் வெளியான எம் குமரன் s/o மகாலட்சுமி என்ற திரைப்படத்தில் ஜெயம் ரவியின் அம்மாவாக நடித்து இருந்தார் நடிகை நதியா. இந்நிலையில் நடிகர் கமலுடன் ஏன் இதுவரை நடிக்கவில்லை என்ற கேள்வி நடிகை நதியாவிடம் கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த நடிகை நதியா உலகப் புகழ்பெற்ற ஒரு நடிகர் கமல்ஹாசன். அவருடன் நான் நடிக்கவில்லை என்பது எனக்கு வருத்தம்தான். சினிமாவில் அதிக ஈடுபாட்டுடன் இருக்கும் ஒருவர் அவருடன் நடிக்க யாராவது வேண்டாம் என்று சொல்வார்களா..? ஆனால் என்னால் நடிக்க முடியாமல் போனதற்கு அப்போது எனக்கு இருந்த கால்ஷீட் பிரச்சனை தான் காரணம்.

வரிசையாக படங்களில் ஒப்பந்தமாகி இருந்தேன். எவ்வளவோ முயன்றும் அந்த படங்களிலிருந்து நடிப்பது என்னால் தவிர்க்க முடியவில்லை. இதனால்தான் நடிகர் கமல்ஹாசனுடன் நான் நடிக்கவில்லை. அந்த வருத்தம் தற்போதும் எனக்கு இருக்கின்றது. விக்ரம் திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்க என்னை தான் கேட்டார்கள்.

ஆனால் வேறு படங்களுக்கு கால்ஷீட் கொடுத்து இருந்ததால் அந்த படம் கைநழுவிப் போனது. இனிமேலும் நடிகர் கமல்ஹாசனுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்று கூறியிருக்கிறார் நடிகை நதியா.

முன்னதாக பாபநாசம் திரைப்படத்தின் நடிகை நதியா நடிக்க இருந்ததாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இறுதியாக அப்போது நடிகர் கமல்ஹாசனுடன் லிவ்விங் ரிலேஷன்ஷிப் இல் வாழ்ந்து வந்த நடிகை கௌதமி ஹீரோயினாக நடித்தார். இதுகுறித்து அவரிடம் கேட்கப்பட்ட பொழுது பாபநாசம் படத்தில் நான் நடிக்க இருப்பதாக வெளியான தகவல் பொய்யானது. அந்த படத்தில் நடிக்குமாறு என்னிடம் யாரும் அணுகவில்லை என்று கூறியிருக்கிறார்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …