மீண்டும் என்ட்ரி கொடுக்கும் நடிகை ரேவதி..! – ரசிகர்கள் மகிழ்ச்சி..!

 தமிழ் சினிமாவில் அதிக அளவு கவர்ச்சியை காட்டாத நரி நடிகைகளின் வரிசையில்  கட்டாயம் நடிகை ரேவதி இடம் பிடித்தார் அந்த அளவுக்கு நடிப்பில் இவர் கெட்டியாக இருந்தாலும் கவர்ச்சி காட்டுவதில் மிகவும் சிக்கனமாக இருப்பார்.

 பொதுவாகவே இவரது படங்கள் அனைத்தும் பெண்மையை போற்ற கூடிய படங்களாகவும்  பெண்களை முன்னெடுத்துச் செல்லக்கூடிய வகையில் உள்ள கேரக்டர்களை தேர்வு செய்து நடிப்பதில் இவர் வல்லவர்.

தற்போது ரேவதிக்கு பாலிவுட்டில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தப் படத்தை இயக்குனர் அனிர்பன் போஸ் என்பவர் இயக்குகிறார். படத்தின் பெயர் ஆயேஜிந்தகி.

 இந்தப் படமானது மருத்துவமனையில் உயிர் இழக்கக் கூடிய ஒரு நபரின் உறுப்பு தானம் பற்றிய கதையைக் கருவாகக் கொண்டு இருக்கும்.

 இக்கட்டான சூழ்நிலையில் உறுப்புதானம் எவ்வளவு சிறப்பான ஒன்று, அதன் மூலம் ஒரு உயிரை காப்பாற்ற அது உதவும் என்பது போன்ற கருத்துக்களை மையமாகக் கொண்டு இந்தப் படம் வெளிவர உள்ளது. இதில் மருத்துவமனை ஊழியர் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

 எனவே தமிழ் திரையுலகில் கண்ணழகி என்று அழைக்கப்படும் மீனாவின் கணவர் உறுப்பு கிடைக்காத காரணத்தால் மரணமடைந்த விஷயம் அனைவருக்கும் தெரிந்ததே.

 இந்த சூழ்நிலையில் முக்கியமான இந்த உறுப்பு தானத்தை மையப்படுத்தி எழுந்து வரும் இந்த கதையில் இவர் நடிப்பது மேலும் படத்திற்கு வலு சேர்ப்பதாக அமைவதோடு பலரையும் உறுப்பு தானம் செய்ய தூண்டுவதாக இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

நடிகை ரேவதி இந்த படத்தில் நடிப்பதோடு நின்றுவிடாமல் பாலிவுட்டில் இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கிறார். இவர் தற்போது கஜோலை வைத்து சலாம் வெங்கி என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார் என்பது திரைப்படம் வரும் டிசம்பர் 7ஆம் தேதி ரிலீசாக உள்ளது மிகவும் குறிப்பிடத்தக்கது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …