காதலுக்காக மொட்டை அடித்துக்கொண்ட பிரபல நடிகை சீதா..! – அதிர்ச்சியில் ரசிகர்கள்..! – என்ன நடந்தது..?

தமிழ் சினிமாவில் ஒரு கட்டத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு இணையான ரசிகர் கூட்டத்தை கொண்டிருந்த சில நடிகர்களில் நடிகர் பார்த்திபனும் ஒருவர். இவருடைய படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோகமான வரவேற்பு இருந்தது.

நடிகர் பார்த்திபன் மற்றும் நடிகை சீதா ஆகிய இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கடந்த 1989ஆம் ஆண்டு புதிய பாதை என்ற திரைப்படத்தில் நடிகர் பார்த்திபனும் நடிகை சீதாவும் ஜோடியாக நடித்தனர்.

இந்த படத்தில் நடிக்கும்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டு 1990 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் நீடித்த இவர்களது திருமண வாழ்க்கை 2001ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது.

இந்த தம்பதிக்கு கீர்த்தனா அபிநயா என இரண்டு மகள்களும் ராக்கி என்ற ஒரு மகனும் உள்ளனர். இந்த பிரிவால் மனம் உடைந்து போன நடிகர் பார்த்திபன் அதன் பிறகு திருமணம் செய்து கொள்ளாமல் தனிமையில் வாழ்ந்து வருகின்றார்.

ஆனால் நடிகை சீதா கடந்த 2010ஆம் ஆண்டு சீரியல் நடிகர் சதீஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டு 2016 ஆம் ஆண்டு அவரையும் விவாகரத்து செய்தார். இந்நிலையில் நடிகை சீதா, பார்த்திபன் காதல் குறித்து சுவாரசியமான சில தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்ட ஒரு நட்சத்திர ஜோடி என்றால் அது நடிகர் பார்த்திபன் நடிகை சீதா ஜோடியும் ஒன்று. ஆனால் ஒரு கட்டத்தில் இவர்கள் விவகாரத்தை பெற்றது ரசிகர்களை ஏமாற்றியது. இந்நிலையில் இயக்குனர் பாக்யராஜ் சமீபத்திய ஒரு பேட்டியில் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

ஒருமுறை இயக்குனர் பார்த்திபனுக்கு நிற்காமல் விக்கல் வந்து கொண்டே இருந்தது மருத்துவர்களை பார்த்தும் அந்த விக்கல் சரியான படியாக இல்லை. இதனால் நடிகை சீதா மிகவும் பயந்து போனார்.

உடனே பார்த்திபனுக்காக சாமிகிட்ட வேண்டிக்கொண்டு பார்த்திபன் குணமடைய வேண்டும் என்பதற்காக மொட்டையடித்துக் கொண்டார் என்ற தகவலை வெளியிட்டுள்ளனர்.

மொட்டை தலையுடன் இருக்கும் நடிகை சீதாவை பார்த்து பார்த்து பாக்கியராஜ் இதுகுறித்து கேட்டபோது இந்த விஷயத்தை கூறியுள்ளார் பார்த்திபன். இதனை அறிந்த பாக்கியராஜ் இப்படி ஒரு மனைவியா..? என்று ஆச்சரியப்பட்ட போவதாக கூறியுள்ளார்.

ஆனால் காலத்தின் கொடுமை இவர்கள் இருவரும் பிரிந்து வாழ கூடிய சூழ் நிலைக்கு தள்ளி விட்டது என்று தன்னுடைய வேதனையை பதிவு செய்துள்ளார்.

இங்கே நம்முடைய தமிழகம்.காம் வாசகர்களுக்கு ஒரு விஷயம் எவ்வளவு தான் கணவன் மனைவி அன்பாக அந்நியோன்யமாக இருந்தாலும் அவ்வப்போது ஏற்படுகின்ற பிரச்சனைகளை அப்போதே பேசி தீர்க்க வேண்டும் அல்லது மறந்துவிட வேண்டும்.

ஒரு பிரச்சனை ஏற்படும் ஏற்படுகிறது என்றால் அந்த பிரச்சினையை அப்போது பேசிய தீர்த்து விடுவது நல்லது. ஆனால் அப்படி பேசி தீர்க்காமல் சகித்துக் கொண்டு பல்லை கடித்து கொண்டு இருப்பது மிகப் பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

இப்படி ஒரு பிரச்சனையை பேசித் தீர்காமலோ அல்லது மறந்து விடாமலோ பல்லைக் கடித்துக் கொண்டு சகித்து கொண்டே சென்றால் ஒரு கட்டத்தில் ஒவ்வொரு பிரச்சனையாக தேங்கி தேங்கி தேங்கி ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுக்கும்.

அன்னைக்கு நீ என்ன பண்ண தெரியுமா..? அப்ப நீ என்ன பண்ண தெரியுமா..? அப்போதிலிருந்தே எனக்கு உன்னை பிடிக்கவில்லை.. பல்லை கடிசுகிட்டு உன்னுடன் வாழ்ந்துட்டு இருக்கேன்.. போன்ற வார்த்தைகள் எல்லாம் கணவனுக்கோ.. மனைவிக்கோ அறவே பிடிக்காத விஷயங்கள்.

என்றோ ஒரு நாள் தங்கள் வாழ்க்கையில் நடந்த அனைத்து பிரச்சனைகளையும் எடுத்து வைத்து பேசுவது நல்ல தீர்வை கொடுக்காது தவிர பிரிவை தான் ஏற்படுத்தும்.

கூடுமானவரை கணவனுக்கு பிடிக்காத செயல்களை மனைவியோ.. மனைவிக்குப் பிடிக்காத செயல்களை கணவனோ.. செய்வதை தவிர்த்து விட வேண்டும்.

கணவன் மனைவி ஆகிய இருவரும் ஒருவருக்கொருவர் ரகசியமாக ஏதாவது ஒரு வேலையைச் செய்தார்கள் அது நிச்சயம் பிரச்சனையில் தான் கொண்டு சென்று விடும். இருவரும் வேறு வேறு என்றாலும் இருவருக்கும் ஒரே மூளை ஒரே இதயம் என்ற உணர்வு இருவருக்குள்ளும் இருக்க வேண்டும்.

ஏதாவது ஒரு சிறிய விஷயத்தை கணவனுக்குத் தெரியாமல் மனைவியோ..? மனைவிக்குத் தெரியாமல் கணவனோ..? மறைத்து விட்டால் அது தெரியவரும் பொழுது மிகப் பெரிய பிரச்சனையை ஏற்படுத்தும்.

எனவே மனைவிக்கு தெரியாமல் அல்லது கணவனுக்கு தெரியாமல் தனியாக ரகசியமாக ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் என்றால் அந்த விஷயத்தை செய்யாமல் இருப்பதே சாலச் சிறந்தது.

கணவன் மனைவி காதல், அன்பு, காமம் என எவ்வளவுதான் இருந்தாலும் இருவரும் வேறு வேறு என்பதை உள்ளத்தின் ஒரு ஓரத்தில் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். என்ன நடந்தாலும் உன்னை விட்டு பிரிய மாட்டேன் என்ற வார்த்தை கேட்பதற்கு இனிமையாக இருக்கும் ஆனால், கணவன் மனைவிக்கு கூறிக்கொள்ள கூடாத முக்கியமான வார்த்தை இது. தவறு செய்தால் பிரிந்து விடுவோம் என்ற பயம் இருவருக்குள்ளும் இருக்க வேண்டும்.

இவற்றை ஆழ் மனதில் வைத்துக் கொண்டு தவறான செயல்கள் அல்லது தன்னுடைய துணைக்கு பிடிக்காத செயல்களை செய்யும் போது இதனை மீண்டும் நினைவுபடுத்திக் கொண்டால் அப்படியான விஷயங்களைச் செய்யாமல் தவிர்த்து விடலாம்.

இதனால் வாழ்வு சிறக்கும் தொடர்ந்து இறுதி காலம் வரை கணவன் மனைவியாகவே இந்த உலகில் பயணிக்க முடியும். காதலிப்போம்..!

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …