கசந்தது 27 வருட திருமண வாழ்க்கை..! – இதனால் தான் விவாகரத்து செய்தேன்.. முதன் முறையாக கூறிய நடிகை ரேவதி..!

கடந்த 1966ம் ஆண்டு கேரளாவில் பிறந்தவர் நடிகை ரேவதி. இவருடைய உண்மையான பெயர் ஆஷா என்பதாகும். இவரை ரேவதி என்று கூப்பிட்டாள் இவருக்கு பிடிக்காதாம். இவருடைய உண்மையான பெயரான ஆஷா என்று கூறினால் மட்டுமே அவருக்கு பிடிக்கும் என்று ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

என்னுடைய குடும்பத்தினர் மற்றும் குடும்ப நண்பர்கள் என்னை அண்ணா என்று தான் அழைப்பார்கள் மற்றபடி திரையுலகினருக்கும் ரசிகர்களுக்கும் நான் ரேவதி தான் என்று கூறியுள்ளார் நடிகை ரேவதி.

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் கடந்த 1986ஆம் ஆண்டு அதாவது தன்னுடைய இருபதாவது வயதில் பிரபல நடிகர் சுரேஷ் சந்திரா மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

கிட்டத்தட்ட 27 ஆண்டுகள் அவருடன் திருமண வாழ்க்கையில் சேர்ந்து வாழ்ந்து வந்தார். ஆனால் கெடுவாய்ப்பாக யார் கண் பட்டதோ தெரியவில்லை இருபத்தி ஏழு ஆண்டுகள் கழித்து அவரை விவாகரத்து செய்தார் நடிகை ரேவதி.

அதாவது தன்னுடைய 47-வது வயதில் தன்னுடைய கணவரை விவாகரத்து செய்தார் நடிகை ரேவதி. கடந்த 2013-ஆம் ஆண்டு தன்னுடைய விவாகரத்தை அறிவித்தார் நடிகை ரேவதி.

சமீபத்தில் ஒரு பேட்டியில் தன்னுடைய திருமண வாழ்க்கை கசந்து போனதற்கான காரணத்தை கூறியுள்ளார் அவர் கூறியதாவது என்னுடைய 17வது வயதில் நான் சினிமாவில் நடிக்க வந்தேன்.

20 வயதில் திருமணம் ஏன் 20 வயதிலேயே திருமணம் செய்து கொண்டோம் என்று பின்னாளில் பலமுறை ஏங்கி இருக்கின்றேன். புன்னகை மன்னன் திரைப்படம் ரிலீஸ் ஆகி இருந்த நேரம் அது. இன்னும் சில படங்களில் நடித்து விட்டு திருமணம் செய்திருக்கலாமே என்று மிகவும் ஏங்கி உள்ளேன் என்று கூறியிருந்தார்.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் நடிகை ரேவதிக்கு குழந்தை இல்லாத காரணத்தினால் 2002ஆம் ஆண்டிலிருந்து இருவரும் பிரிந்து தான் வாழ்ந்து இருக்கிறார்கள் ஒரு கட்டத்தில் விவாகரத்து செய்துவிடலாம் என்று 2013ஆம் ஆண்டு பரஸ்பரம் விவாகரத்து பெற்றுள்ளனர்

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …