இப்படித்தான் மாவீரன் திரைப்படம் ரெட் ஜெயண்ட்-க்கு கை மாறியதாம்..! – அடக்கொடுமைய..!

நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய படத்தை வெளியிட விடாமல் தொந்தரவு கொடுக்கும் நபர்களிடமிருந்து லாவகமாக எஸ்கேப் ஆகி இருக்கிறார். அது குறித்த பதிவுதான் இது.

தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த சிவகார்த்திகேயன் அதன் மூலம் தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். அதனை தொடர்ந்து மெரினா என்ற திரைப்படத்தில் ஹீரோயினா ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

அதன் பிறகு எதிர்நீச்சல் மான்கராத்தே என அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து முன்னணி நடிகர் என்ற பட்டியலில் இருந்தார் நடிகர் சிவகார்த்திகேயன். கோடிகளில் சம்பளம் வாங்கும் அளவுக்கு உயர்ந்த சிவகார்த்திகேயன் ஒரு கட்டத்தில் சொந்த பணத்தை போட்டு சில படங்களை தயாரிக்கவும் செய்தார்.

அப்படி தயாரித்த சில திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பை பெராமல் தரைதட்டி நின்றன. இதனால் கடுமையான நிதி பிரச்சனைகள் சிக்கினார் சிவகார்த்திகேயன்.

அவருடைய கடன் மட்டுமே 100 கோடிகளை தாண்டும் அளவுக்கு சென்றது. எனவே நடிகர் சிவகார்த்திகேயனின் ஒவ்வொரு படம் வெளியாகும் பொழுதும் கடன் கொடுத்தவர்கள் சிவகார்த்திகேயனை நெருங்கி தொந்தரவு செய்து இருக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது மாவீரன் திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன் இந்த படத்தை வெளியிடாமல் தடுக்க பல்வேறு முயற்சிகள் நடைபெற்றிருக்கின்றன.

கொடுக்க வேண்டிய பணத்தை கொடுத்துவிட்டு அதன் பிறகு படத்தை வெளியிட வேண்டும் என பல கட்ட பஞ்சாயத்துகளும் நடைபெற்று இருக்கிறது. ஒரு கட்டத்தில் இந்த படத்தின் வசூலில் இருந்து இவ்வளவு கோடி ரூபாய் கொடுக்கிறேன் அந்த படத்தின் வசூல் இருந்து அவ்வளவு கோடி ரூபாய் கொடுக்கிறேன் என்று வாக்குறுதி கொடுத்திருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.

ஆனால் அவர் கொடுத்த வாக்குறுதியின் படி அவர் நடந்து கொள்ளவில்லை என தெரிகிறது. சமீபத்தில் தயாரிப்பாளர் சங்கத்தை நாடியுள்ளனர் கடன் கொடுத்தவர்கள்.

தயாரிப்பாளர் சங்கமும் நடிகர் சிவகார்த்திகேயனை அழைத்து கடனை கட்டாமல் இனிமேல் உங்கள் படத்தை வெளியிட மாட்டோம் என கறார் காட்டியுள்ளனர். ஒவ்வொரு படத்தின் லாபத்தில் இருந்தும் 25 கோடி ரூபாய் கொடுத்து விடுங்கள் என தொந்தரவு கொடுத்திருக்கிறார்கள்.

ஆனால் நடிகர் சிவகார்த்திகேயன் நடிகர் உதயநிதி ஸ்டாலினை தொடர்பு கொண்டு என்னுடைய அயலான் மற்றும் மாவீரன் என இரண்டு திரைப்படங்களையும் நீங்களே வெளியிடுங்கள் என கேட்க நடிகர் உதயநிதியும் உடனடியாக ஓகே சொல்லி இருக்கிறார்.

கடன் பிரச்சனையிலிருந்து தப்பிக்கவும் தன்னுடைய படம் எந்த பிரச்சனையும் இல்லாமல் வெளியாக வேண்டும் என்ற காரணத்தினாலும் லாவகமாக காய் நகற்த்தி இருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.

உதயநிதி ஸ்டாலின் படத்திற்குள் வந்து விட்டதை தொடர்ந்து கடன் கொடுத்தவர்களும் தயாரிப்பாளர் சங்கமும் அமைதியாகிவிட்டார்களாம். சிவகார்த்திகேயன் சமயோகிதமாக யோசித்து இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ்-க்கு கொடுத்திருக்கிறார்.

இது ஒரு பக்கம் இருந்தாலும் கூட, இந்த ரெண்டு படத்தையும் ரெட் ஜெயண்ட் மூவிஸ்-க்கு கொடுக்க வேண்டும் என்ற காரணத்தினால் தான் சிவகார்த்திகேயனுக்கு அழுத்தமே கொடுக்கப்பட்டது.

இது கூட தெரியாமல்.. சிவகார்த்திகேயன் ஏதோ மாஸ்டர் ஸ்ட்ரோக் பண்ணி விட்டார் என்று கூறிக் கொண்டிருக்கிறார்களே.. அடக்கொடுமைய.. என கோடம்பாக்கத்தில் முணுமுணுக்கும் வாய்களும் இருக்கத்தான் செய்கிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *