உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள பல்வேறு வகையான வழிமுறைகளை நாம் பயன்படுத்தி வருகிறோம். அதற்காக உணவு முறைகளில் மாற்றம் செய்வதோடு மட்டுமல்லாமல் டயட் போன்ற வழிமுறைகளை பின்பற்றி வருகிறோம்.
பன்நெடுங்காலமாக இந்தியாவில் பயன்பாட்டில் இருக்கும் ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் குக்குலு எண்ணற்ற நோய்களை தீர்க்க உதவுகிறது.
அதிலும் குறிப்பாக உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக வேண்டும் என்று நினைப்பவர்கள் கட்டாயம் இந்த குக்குலு – வை எடுத்துக் கொள்வதின் மூலம் உடல் எடையை எளிதில் குறைக்கலாம் என்று நிபுணர்கள் கூறியிருக்கிறார்கள்.
இதற்குக் காரணம் இந்த குக்குலு கொழுப்பை குறைப்பதில் மிகச்சிறந்த பணியை செய்கிறது. காலை வேலையில் தேன் கலந்து குளிர்ந்த நீரில் இதை சாப்பிடுவதின் மூலம் உடலில் இருக்கக்கூடிய தேவையில்லாத கொழுப்புகள் கரையும்.
மேலும் உடலில் உற்பத்தியாகின்ற கெட்ட கொழுப்பை குறைப்பதற்கு இது பயன்படுகிறது. எனவே இதை ஒரு ஹைப்பர் லிபிடெமியா சிகிச்சைக்கு உட்படுத்தி வருகிறார்கள்.
எனவே உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இதை எடுத்துக் கொள்வது நல்லது. இந்த மருந்தனை கர்ப்பமாக இருக்கும் பெண்கள் சாப்பிடக்கூடாது. அது போல் பாலூட்டும் பெண்கள் மருத்துவர்களின் ஆலோசனையை பெற்ற பிறகு தான் இதை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
நீரழிவு நோயாளிகள் ரத்த அழுத்தம் மாறுபாடு உள்ளவர்கள் இதை பயன்படுத்தும் போது எச்சரிக்கையோடும் கவனத்தோடும் இருக்க வேண்டும். ஏனென்றால் ரத்தத்தில் இருக்கக்கூடிய சர்க்கரையை வேகமாக கட்டுப்படுத்த கூடிய ஆற்றல் இந்த குக்குலுவுக்கு உள்ளது.
இந்த குக்குலுவை பயன்படுத்த விரும்புபவர்கள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் பொடி அல்லது சூரணத்தை வாங்கி வெதுவெதுப்பான நீரில் கால் டீஸ்பூன் சேர்த்து தினமும் வெறும் வயிற்றில் பருகி வரலாம்.மேலும் இது மாத்திரை மற்றும் கேப்சூல் வடிவிலும் கிடைக்கிறது.
இந்த மருந்தினை உட்கொள்வதோடு தினமும் உடற்பயிற்சி செய்வதை வழக்கப்படுத்திக் கொண்டால் கட்டாயம் உங்கள் உடல் எடை கட்டுக்கோப்புக்குள் வரும். மேலும் அதிகபட்ச கொழுப்புகள் கரையும்.