காதல் தோல்வியால் இனிமேல் திருமணம் என்ற வார்த்தைக்கே இடமில்லை – மனதை உருக்கிய ரெஜினா!

தமிழ் தெலுங்கு இரண்டு மொழிகளிலும் மிகச் சிறப்பான முறையில் நடித்து  மனதைக் கவர்ந்த  நடிகை ரெஜினா. தமிழில் கேடி பில்லா, கில்லாடி ரங்கா படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்திருந்தார்.மேலும் இவர்  ராஜதந்திரம், மாநகரம், சக்ரா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

 சில நாட்களுக்கு முன் இவருக்கு திருமணம் என்று அதிர்ச்சி தரக்கூடிய தகவல்கள் வெளி வந்தது. ஆனால் அதை பற்றி எந்த கருத்தையும் கூறாத நிலையில் தற்போது இவர் கூறி இருக்கக்கூடிய கருத்தானது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 தனது திருமணம் பற்றிய  வெளி வந்த செய்திகளுக்கு  முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக  ரெஜினா விவரங்களை விளக்கமாக கூறியிருக்கிறார்.

 அது என்ன என்றால் 2019ஆம் ஆண்டு வரை   இவர் காதல் மிக நன்றாக சென்று கொண்டு இருந்தது. ஆனால் அந்த காதல் 2020  முறிந்து விட்டதாக அவர் கூறினார். மிகவும் விரும்பிய அந்த நபரிடம் உண்டான முறிவு காரணமாக அதிலிருந்து மீண்டு வரவே அவருக்கு பல மாதங்கள் ஆகிவிட்டதாம். இன்னும் அந்த வலி அவருக்குள் இருக்கிறது. எனவே என் வாழ்க்கையில் இனி திருமணம் என்ற ஒன்றுக்கு அவசியமே இல்லை. இவ்வளவு ஏன் திருமணம் என்ற வார்த்தையை கேட்டாலே எனக்கு பிடிக்கவில்லை என்று சோகத்துடன் கூறினார்.

இனி எதிர்வரும் காலத்தில் தான் திருமணம் செய்து கொள்வேனா? அல்லது மாட்டேனா என்பது பற்றிய  நிலை இன்னும் எனக்கு சரிவரத் தெரியவில்லை. எனினும் சிறுவயது முதலேயே நான் தனியாக சுயமாக என் காலில் நின்று வளர்ந்து வந்திருக்கிறேன்.

இவ்வாறு நடிகை ரெஜினா பேசி இருப்பதை கேட்ட ரசிகர்கள் இனிமேல் இவரின் திருமணம் செய்து கொள்ள மாட்டார்.  இவர் வாழ்க்கை இப்படியே போக வேண்டும் என்று புலம்பி வருகிறார்கள்.

மேலும் இவ்வளவு பெரிய காயம் ரெஜினாவின் மனசுக்குள் இருக்கும் என்பதை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அவர்கள் பேசிய விதம் அனைவரையும் உருக வைத்தது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …