“தினமும் கெட்ட கனவுகள் ஏற்படுகிறதா..!” – அதற்கு பரிகாரம் ஆஞ்சநேயர் வழிபாடு..!

மிகப்பெரிய பராக்கிரமசாலியான ஸ்ரீமன் ராமருக்கு உதவி செய்த ஹனுமான் பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியமே இல்லை. ஏனென்றால் ஆஞ்சநேயர் சிரஞ்சீவி மட்டுமல்ல, நினைத்த காரியத்தை முடிப்பதற்கும், ஜாதகத்தில் இருக்கின்ற தோஷங்களை நிவர்த்தி செய்யவும், கிரக பீடைகளை வேர் எடுக்கவும் உதவி செய்யும் அற்புத ஆற்றல் கொண்டவர்.

நமக்கு எப்போதெல்லாம் துன்பம் ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் நம்மை காக்கக்கூடிய கலியுக மூர்த்தியாக ஆஞ்சநேயர் திகழ்கிறார்.எனவே அனுமானை வழிபட்டால் அனைத்து காரியங்களும் கைகூடும் என்று முன்னோர்கள் சொன்ன கருத்துக்கு ஏற்ப ராமா என்ற திருமந்திரத்தை நீங்கள் சொல்வதின் மூலமே அனுமாரின் மனம் குளிர்ந்து போகும்.

வைணவ கோயில்கள் கோயில்களில் ஆஞ்சநேயருக்கு என்று தனியாக சன்னதிகள் இருந்தாலும், இந்தியா முழுவதுமே ஆஞ்சநேயர் வழிபாடு சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஆஞ்சநேயர் பிறந்த நாளை ஹனுமத் ஜெயந்தியாக நாடு முழுவதும் கொண்டாடுகிறோம்.

உங்களுக்கு அடிக்கடி கனவுகளில் கெட்ட, கெட்ட சொப்பனங்கள் ஏற்படுகிறது என்றால் அதில் இருந்து நீங்கள் தப்பித்துக் கொள்ள ஆஞ்சநேயரை வணங்கி வந்தாலே போதும். உங்களுக்கு ஏற்படும் துஷ்ட கனவுகள் அனைத்தும் விலகி நல்ல முறையில் உறக்கம் ஏற்படும்.

இதற்காக நீங்கள் நாமக்கல் ஆஞ்சநேயரை வழி படலாம். மேலும் நீங்கள் செவ்வாய், புதன்கிழமைகளில் அஞ்சனைகளை வழிபடுவதன் மூலம் உங்களுக்கு ஏற்படும் தீய சொப்பனங்கள் ஏற்படாது.

மேலும் இனிமேல் தீய சொப்பனங்கள் ஏற்படக் கூடாது என்ற எண்ணத்தில் இருக்கக்கூடிய நீங்கள் அனுமானின் மந்திரத்தை உறங்குவதற்கு முன்பு உச்சரித்து வாருங்கள். அதுமட்டுமல்லாமல் அனுமாருக்கு வெண்ணெய் சாத்தி வழிபடுவதாகவும் வேண்டுதலை நீங்கள் வைத்து விட்டால், உங்கள் உறக்கத்தை கெடுக்கும் தீய சொப்பனங்கள் ஒன்றும் ஏற்படாது.

உங்கள் பயத்தை நீக்கி மனநிம்மதியை அளிக்கின்ற எந்த ஹனுமனை சனிக்கிழமை தோறும் விரதம் இருந்து வழிபட எண்ணற்ற நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும்.

மேற்கூறிய கருத்துக்களை நீங்கள் புரிந்து கொண்டு அதற்குத் தக்கவாறு அனுமனை வழிபட்டு வருவதின் மூலம் உங்களுக்கு ஏற்படக்கூடிய துர்பனங்களில் இருந்து விடுதலை கிடைப்பதோடு நல்ல தூக்கமும் வளமான வாழ்க்கையும் கிடைக்கும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …