“என்ன கண்ணு இது.. இப்படி உப்பி போயிருக்கு..” – ரேஷ்மா பசுபுலேட்டியை பார்த்துச ஷாக் ஆன ரசிகர்கள்..!

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற படத்தின் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான லவ் என்ற சீரியலில் நடித்ததன் மூலம் சீரியல் நடிகையாக அறிமுகமான இவர் தெலுங்கில் சில தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார்.

தமிழில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றலாம் என்று வந்த இவருக்கு அடித்தது ஜாக்பாட் என சீரியலில் ஹீரோயின் ரேஞ்சுக்கு இருக்கக்கூடிய ஒரு கதாபாத்திரம் கிடைத்தது. நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் வெளியான வம்சம் சீரியல் இந்த சீரியலில் ஹீரோயினாக நடித்திருந்தார் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி.

இந்த சீரியலை தொடர்ந்து வாணி ராணி, மரகத வீனை உள்ளிட்ட சீரியலில் நடித்த பிரபலமான இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னுடைய வாழ்க்கையில் நடந்த கொடுமையான விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

தான் காதலித்து திருமணம் செய்து கொண்ட எந்தத் திருமணமும் எனக்கு சந்தோஷத்தைக் கொடுக்கவில்லை. மாறாக எனக்கு மன அழுத்தத்தையும் வாழ்க்கையின் மீது ஒரு பயம்தான் கொடுத்தது. ஒரு கட்டத்தில் நான் கர்ப்பமாக இருந்தபோது என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல கூட ஆளில்லை.

உச்சகட்டமாக, நிறைமாத கர்ப்பிணியாக இருந்த போது.. என்னுடைய வீட்டிலேயே பனிக்குடம் உடைந்து விட்ட நிலையில்.. என்னை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஆள் இல்லை.. எனவே, இரத்தம் சொட்ட சோட்டா  நானே காரை எடுத்துக்கொண்டு மருத்துவமனையில் சென்று சிகிச்சை எடுத்துக் கொண்டு குழந்தையை பெற்றெடுத்தேன் என்று இவர் பேசியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இவருடைய இந்த கதையை வைத்து பெற்றோரின் சம்மதம் இல்லாமல் காதலனை நம்பி செல்லும் பெண்களுக்கு என்ன நிலைமை வரும் என்று புரிந்து கொள்ள வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வந்தனர்.

இது ஒரு பக்கம் இருக்க தற்போது சீரியல் மற்றும் சினிமா என இரட்டை குதிரை சவாரி செய்து வரும் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி மூன்றாவதாக ஒரு குதிரையையும் தன்னுடைய வண்டியில் பூட்டியிருக்கிறார், அதுதான் வெப்சீரிஸ்களில் நடிப்பது.

சமீபத்தில் நடிகர் விமல் நடிப்பில் வெளியான விலங்கு என்ற வெப்சீரிஸ்-ல் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. எந்த அளவுக்கு முக்கியம் என்றால் அவருடைய கதாபாத்திரத்தை மையமாக வைத்துத்தான் அந்த வெப்சீரிஸ்-ன் கதையே பின்னப்பட்டிருந்தது.

கதையின் மையக் கருவாக இருந்த கதாபாத்திரத்தில் படு கிளாமரான காட்சிகளில் நடித்து ரசிகர்களை அதிர வைத்தார் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. இந்நிலையில், தன்னுடைய இணையப் பக்கங்களில் அன்றாடம் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதையும் வாடிக்கையாகக் கொண்டு இருக்கும் இவர் தற்போது வெளியேற்றக்கூடிய சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

அதில் அவர் கூறியிருப்பதாவது. பல இரவுகள் தூக்கம் இல்லாமல் படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகிறேன். எனவே தன்னுடைய கண்கள் உப்பி போய் இருக்கின்றன என்றாலும் என்னை நான் உணர்கிறேன் என்று கூறுவது போல ஒரு கேப்டனை வைத்து புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் என்ன கண்ணு இப்படி உப்பிப்போய் இருந்தது என்று குழம்பி வருகின்றனர்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …