ரிது வர்மா : தமிழில் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை ரிது வர்மா.
இந்த படத்தில் ஆண் சமூகத்தின் மீது வெறுப்பு கொண்ட ஒரு பெண் ஒரு கட்டத்தில் அவர்களை எப்படியெல்லாம் ஏமாற்றி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கிறார் என்பது பற்றிய கதை.
பல்வேறு சுவாரசியமான திருப்பங்களுடன் இந்த திரைப்படம் வெளியானது. திருப்பங்களுக்கு மேல் திருப்பம் என மிகவும் விறுவிறுப்பாக இந்த படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டு இருந்தது.
இந்த திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதிலும் நடிகை ரித்து வர்மாவின் நடிப்பு இந்த படத்திற்கு வலு சேர்த்தது என்று தான் கூற வேண்டும். எனவே இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தது.
தொடர்ந்து இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் துருவ நட்சத்திரம் என்ற திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் இந்த திரைப்படம் சில பிரச்சனைகள் காரணமாக இன்னும் வெளியாகாமல் இருக்கிறது.
சமீபத்தில் மீண்டும் இந்த படத்தின் வேலைகள் தொடங்கின எனவே விரைவில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ வெளியீட்டு தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம் இந்த படத்தின் ரிலீஸாக காத்திருக்கிறார் நடிகை ரித்து வர்மா இந்த திரைப்படம் வெளியான பிறகு தமிழில் தனக்கென ஒரு மார்க்கெட் ஓபன் ஆகும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்.
மறுபக்கம் தமிழ் மட்டுமில்லாமல் கன்னடம் தெலுங்கு மலையாளம் என பல மொழிகளில் தன்னுடைய பங்களிப்பை கொடுத்து வரும் இவர் தொடர்ந்து பட வாய்ப்புகளுக்காக இணைய பக்கங்களில் தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்வதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்.
அந்த வகையில், சமீபத்தில் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்று இருந்த அவர் அங்கிருந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணைய பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்.
தற்போதைய ஒரு வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது மட்டுமில்லாமல் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளையும் குவித்து வருகின்றது.