ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளிவந்த ஆர்ஆர்ஆர் திரைப்படம் சக்கை போடு போட்டது. அதுமட்டுமல்லாமல் வசூலை வாரிக் குவித்த பாக்ஸ் ஆபிஸ் கிட் படங்களில் ஒன்றாக திகழ்ந்தது.
பாகுபலி திரைப்படம் வெற்றிக்கு பின் ராஜமவுலி இயக்கிய படம் ரத்தம் ரணம் ரௌத்திரம் இதைத்தான் சுருக்கமாக ஆர்ஆர்ஆர் என்று அழைத்தார்கள்.
மேலும் இரண்டு சுதந்திரப் போராட்ட வீரர்களின் நட்பை மையமாகக் கொண்டு இந்த படத்தை இயக்கியிருந்தார். ராஜமவுலி இப்படத்தில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், நடிகைகள் ஆலியா பட், ஸ்ரேயா சரண் நடிகர் சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருந்தார்கள்.
இந்த படம் மிகவும் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது.மேலும் இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளிவந்தது
இப்படம் வெளிவந்த அனைத்து மொழிகளிலுமே சக்கை போடு போட்ட இந்த படம் பாக்ஸ் ஆபீஸ் சுமார் ஆயிரம் கோடிக்கு மேல் வசூரில் சாதனை படைத்தது.
அதுமட்டுமின்றி ஜப்பானில் ஜப்பான் மொழியில் ரிலீஸ் ஆகி அங்கும் 20 கோடிக்கு மேல் வசூல் புரிந்திருக்கிறது.
மேலும் இந்த படத்துக்கு ஆஸ்கார் அவார்டு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்று பேசி வந்த நிலையில் தற்போது விருதுக்கு நிகரான கோல்டன் குளோப் விருது வருகின்ற ஜனவரி மாதம் 10 ஆம் தேதி அமெரிக்காவில் கொடுக்கப்பட உள்ள நிலையில் உள்ளது .
ஆங்கிலம் அல்லாத ஒரு சிறந்த படம் மற்றும் சிறந்த ஒரிஜினல் பாடல் நாட்டு நாட்டு பாடல் ஆகிய இரு பிரிவுகளுக்கு தேர்வு ஆகி இருக்கும் நிலையில் இதற்கு இசை புயல் ஏ ஆர் ரகுமான் ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை பதிவு செய்து இருக்கிறார்.