“இப்படித்தான் ருத்திராட்சம் அணிய வேண்டுமா…!” – இதில் இவ்வளவு விஷயம் இருக்கா?

இன்று சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பார்த்து கழுத்தில் ருத்திராட்சம் அணிவதை வழக்கப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அப்படி அணிபவர்களுக்கு அந்த ருத்திராட்சத்தை அணிவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும். அந்த ருத்ராட்சத்தை எப்படி அணிய வேண்டும் என்ற உண்மை நிலை தெரிவதில்லை. எனவே இந்த கட்டுரையில் நீங்கள் ருத்ராட்சத்தை கழுத்தில் அணிந்து இருந்தால் அதை எப்படி அணிய வேண்டும் என்பதை பற்றி சில விதிமுறைகளை படித்து தெரிந்து கொள்ளலாம்.

ருத்ராட்சம் அணியும் முறை

இந்த ருத்ராட்சம் ஆனது சூரியன், சந்திரன் அக்னி இவர்களின் அம்சமாக சிவபெருமானின் முக்கண்ணாக திகழ்வதாக கூறியிருக்கிறார்கள் .ஒரு சமயத்தில் சிவபெருமான் ஜெபத்தில் இருந்தபோது அவர் கண்களில் இருந்து வடிந்த கண்ணீர் தான் ருத்ராட்சம் மரமாக தோன்றியதாக புராணங்களில் கூறியிருக்கிறார்கள்.

அந்த வகையில் இந்த ருத்ராட்சத்தை அணியக்கூடிய நபர்களை ருத்ரனின் அம்சமாக பார்ப்பார்கள். இவர்கள் இந்த ருத்ராட்சை அணிவதின் மூலம் துன்பத்தால் கண்களில் தண்ணீர் ஏற்படாமல் பகவான் காப்பாற்றுவார் என்பது கூற்றாக உள்ளது.

எனவே நீங்கள் ருத்ராட்சத்தை அணியும் போது அதை சிவப்பு கயிற்றில் கட்டி உங்கள் கழுத்தில் அணிகலாம் அல்லது தங்கம் வெள்ளி போன்ற சங்கிலிகளில் கோர்த்தும் நீங்கள் அணியலாம். குறிப்பாக நீங்கள் கருப்பு கயிறில் இதை கட்டி தொங்க விடக் கூடாது.

ருத்ராட்சம் அணிவதின் மூலம் முப்பெரும் தெய்வங்களின் ஆசீர்வாதம் உங்களுக்கு கிடைக்கும். ருத்ராட்சத்தின் மேல் பக்கத்தில் பிரம்மாவும் கீழ்புறத்தில் விஷ்ணுவும் நடுவில் சிவபெருமானும் வசிப்பதாக சாஸ்திரங்கள் கூறுகிறது.

ருத்ராட்சத்தை நீங்கள் வாங்கும் போது கவனித்து வாங்க வேண்டும். பூச்சிகள் அரித்த ருத்திராட்சத்தையும், பிளவு பட்டு இருக்கும், ருத்திராட்சத்தையும் நீங்கள் போடக்கூடாது.

ருத்திராட்சம் போடுவதற்கு முன்பு அதை கடவுளின் பாதத்தில் வைத்து நன்கு பூஜை செய்து, அதன் பிறகு நீங்கள் அணிய வேண்டும்.

சற்று பெரிய ருத்ராட்சத்தை அணிவது உங்களுக்கு நல்ல பலனை கொடுக்கும். சுண்டைக்காய் அளவு உள்ள ருத்ராட்சத்தை அணிவதினால் மத்திம பலனை கிடைக்கும்.

ருத்ராட்சத்தை அணிந்திருப்பவர்களின் பக்கத்தில் தீய சக்தி அண்டாது. ருத்ராட்சம் தரித்தவர்கள் ருத்ரரின் சொரூபமாகவே பார்க்கப்படுவார்கள்.

 எனவே இன்றைய தலைமுறை ருத்ராட்சத்தை அணிந்திருப்பது வரவேற்கத்தக்க விஷயம் தான். ஆனால் விஷயம் அறிந்து நீங்கள் அதை அணிந்தால் இன்னும் கூடுதல் பயன்களை பெறலாம்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …