கடந்த 2014 ஆம் ஆண்டு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் ஜிகர்தண்டா இதில் சித்தார்த், பாபி சிம்ஹா, லஷ்மி மேனன் உள்ளிட்டோ நடித்திருந்தார்கள்.இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பரவலாக நல்ல வரவேற்பை பெற்ற இவர்களுக்கு புகழையும் பெற்றுத் தந்தது.
இதனை அடுத்து எட்டு ஆண்டுகள் கழிந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பகுதியை மீண்டும் கார்த்திக் சுப்பராஜ் எடுக்க முடிவு செய்திருக்கிறார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் அறிவித்து ரசிகர்களின் மனதில் குஷியை ஏற்படுத்திவிட்டார்.
மேலும் தற்போது ஜிகர்தண்டா இரண்டு படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்பது கூட தெரியாமல் இருந்த நிலையில் எஸ் ஜே சூர்யா மெளத்தார் கண்ணுடன் சர்ப்ரைஸாக காட்சியளித்திருக்கிறார்.
இதனை அடுத்து மிகவும் மாசான கெட்டப்பில் என்ட்ரீ கொடுத்திருக்கும் ராகவா லாரன்ஸ் இவர்களுக்கு இடையே ஏற்படக்கூடிய மோதல் என்ன என்பதை விளக்குவது தான் கதையா என்று கேட்கும்படி உள்ளது.
அதுமட்டுமல்லாமல் கையில் துப்பாக்கியை சுழற்றிக்கொண்டு இருக்கும்போது எஸ் ஜே சூர்யா கையில் எதுவும் இல்லாமல் காற்றில் உள்ளதை வைத்தே வித்தை காட்டுவது போல செய்து இருக்கும் காட்சிகள் செமையாக உள்ளது.
இதனை அடுத்து ஜிகர்தண்டா பக்கத்தின் இரண்டாம் பகுதிக்கு ஜிகர்தண்டா டபுள் ஆக்ஸ் என்ற பெயர் இட்டு இருக்கிறார்கள்.
மேலும் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருக்கிறார். வேறு லெவலில் இந்த ஜிகர்தண்டா டபுள் ஆக்ஸ் இருக்கும் என்பது சந்தேகமே இல்லை.
டீசர் வெளியான சில நிமிடங்களிலேயே வைரலாக பரவி ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்று இருப்பதால் படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவலில் ரசிகர்கள் தற்போது இருக்கிறார்கள்.
இதனை எடுத்து இவர்கள் இருவர் காமினேஷனில் களம் கண்டிருக்கும் கார்த்திக் சுப்புராஜ் எந்த படத்தில் எப்படி கதையை நகர்த்தி இருப்பார் என்பது படம் வெளிவந்த பின்னால் அனைவருக்கும் தெரியவரும்.