தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி ஆகிய மொழிகளில் சக்கை போடு போட்டு டாப் டக்கர் நடிகையாக இருப்பவர் தான் சாய்பல்லவி. தமிழ் மற்றும் தெலுங்கில் படு பிஸியாக பல படங்களை செய்து வரும் நடிகை சாய் பல்லவியின் நடிப்பில் வெளிவந்த லவ் ஸ்டோரி, விராட பருவம், கார்கி, ஷியாம் சிங்கா ராய் போன்ற படங்கள் தொடர் வெற்றியை இவருக்கு கொடுத்தது.
இந்தத் தொடர் வெற்றியின் மூலம் திரையுலகில் இவரின் மார்க்கெட் மிக பெரிய அளவில் உயர்ந்தது. இதனைத் தொடர்ந்து இவர் ராகுல் சன்கிரித்யன் இயக்கத்தில் நானியோடு இணைந்து நடித்து வெளியான படம் ஷாம் சிங்காராய் ஆனது மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது குறிப்பாக இதில் இவர் பேசிய வசனங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு அடித்தட்டு மக்களுக்கும் உத்வேகம் அளிக்கும் வகையில் இருந்தது.
3 மொழிகளில் படமாக்கப்பட்ட இந்த திரைப்படமானது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு மிக நல்ல பெயரை நானி மட்டும் சாய் பல்லவி பெற்றுத்தந்தது.
இப்போது இந்தப் படமானது ஆஸ்காருக்கு பரிந்துரைத்துள்ளது மூன்று பிரிவுகளின் கீழ் இந்த பரிந்துரை நிகழ்ந்துள்ளது. அவை என்னென்ன என்றால் சிறந்த கதையம்சம் பொருந்திய திரைப்படம் இரண்டாவது சிறந்த பின்னணி இசை பொருந்திய திரைப்படம் மூன்றாவது பாரம்பரிய கலாச்சார நடனம் ஆகும்.
ஏற்கனவே சாய்பல்லவி தனுசுடன் இணைந்து ரவுடி பேபி பாடலில் மிக தரமான முறையில் நடனத்தை ஆடி இருப்பது அனைவருக்கும் தெரிந்ததே எனவே இவருக்கு கண்டிப்பாக கலாச்சார பாரம்பரிய நடனத்தை காண ஆஸ்கர் விருது கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் மிகவும் உற்சாகம் அடைந்து இருக்கிறார்கள்.
மேலும் இந்த படக்குழுவினர் இதன் காரணத்தினால் பெரும் மகிழ்ச்சியோடு அதன் நிகழ்விற்காக காத்திருக்க… கண்டிப்பாக இவருக்கு ஆஸ்கார் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சாய் பல்லவியின் ரசிகர் கூட்டம் காத்திருக்கிறார்கள்.
ஆஸ்கார் நாயகியாக சாய்பல்லவி வருவதை பார்ப்பதற்கு என்று அனைவரும் காத்திருக்கிறார்கள். ஆஸ்கார் கனவு நிறைவேறுமா? பொருத்திருந்து பார்க்கலாம்.