அந்த ஷோ-வை நம்ப மாட்டேன் – அங்கே பணம் தான் பேசுது.. பிரபல TV சேனல் குறித்து சாய் பல்லவி..!

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக கூடிய ரியாலிட்டி ஷோக்களை நான் நம்புவதில்லை அங்கே திறமையானவர்களுக்கு எப்போதும் மரியாதை கிடையாது பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே மரியாதை கிடைக்கும் என்று நடிகை சாய் பல்லவி கூறியிருக்கிறார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகை சாய் பல்லவி தற்போது தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் மிகவும் பிரபலமாக நடித்து வருகிறார். தமிழில் இவர் நடித்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பை பெறாத வருகின்றன.

ஆனால் இவர் வேறு மொழியில் நடிக்கும் படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெறுகின்றன. விஜய் டிவியில் ஒளிபரப்பான உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற ரியாலிட்டி ஷோவில் போட்டியாளராக கலந்து கொண்டு இரண்டாவது வின்னராக வந்திருந்தார் நடிகை சாய் பல்லவி.

அதன் பிறகுதான் நிறைய சினிமா வாய்ப்புகள் வரத் தொடங்கியது. தொடர்ந்து கஸ்தூரி மான் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த இவர் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் உருவான பிரேமம் திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

அந்த படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. அவரின் தொடர்ந்து பல்வேறு படங்களில் ஒப்பந்தமாகியிருக்கிறார். பல்வேறு படங்களில் வெற்றி படங்களாகும் கொடுத்திருக்கிறார் குறுகிய காலத்தில் மிகவும் பிரபலமான நடிகையாக உருவெடுத்தார் நடிகை சாய் பல்லவி.

சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியதாவது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குறித்து பேசியிருக்கிறார். அதாவது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களை நான் நம்புவது கிடையாது.

நடன நிகழ்ச்சிகளை பொறுத்தவரை திறமையானவர்களுக்கு எப்போதும் மரியாதை கிடையாது பொதுவாக தொலைக்காட்சியில் தொடர்ந்து பணத்திற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் இல்லை என்றால் பிரபலத்தின் வாரிசாக அல்லது அவர்களுடைய சிபாரிசுகளை பெற்றவர்களாக இருக்கவேண்டும்.

அவர்களுக்குத்தான் அங்கே மரியாதை கிடைக்கும். இதனால் நான் நடன போட்டிகளை நம்புவதில்லை மற்றும் அவற்றை வெறுக்கிறேன் என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார். ஒருவேளை இவர் பங்கு பெற்ற விஜய் டிவி நிகழ்ச்சியை தான் இப்படி கூறுகிறாரோ என்று சந்தேகக் கேள்விகளை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …