இப்படி சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற அவசியம் எனக்கில்லை – சாய் பல்லவி ஒரே போடு..!

நடிகை சாய் பல்லவி சமீபத்திய ஒரு பேட்டியில் தன்னுடைய மதிப்பை குறைத்துக் கொண்டு நடிக்கமாட்டேன் என்று கூறியிருப்பது ரசிகர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. மலையாள மொழியில் வெளியான பிரேமம் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து வந்தவர் நடிகை சாய் பல்லவி.

இந்த ஒரு திரைப்படம் இவருக்கு தென்னிந்தியா முழுவதும் பிரபலமான நடிகை என்ற அந்தஸ்தை கொடுத்தது. தொடர்ந்து தமிழில் மாரி 2, என் ஜி கே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் வெளியான கார்கி என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகின்றது. மேலும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டும் குவிந்து வருகின்றது.

கமர்சியல் படங்கள், கதாநாயகர்களுடன் நாலு பாட்டுக்கு ஆட்டம் போடும் படங்களாக இல்லாமல் கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் இருக்கும் கதைகளை மட்டும் தேர்வு செய்து நடிக்கிறார் நடிகை சாய் பல்லவி.

அதே சமயத்தில் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் மட்டும் நடித்து வரும் இவர் கிளாமரான கதாபாத்திரங்களில் நடிக்க மாட்டேன் என்று உறுதியாக கூறி விடுகிறார்.

இந்நிலையில் சில முன்னணி ஹீரோக்களின் படங்களில் ஹீரோயினாக நடிக்க என்னை அணுகினார்கள் எனவும் கவர்ச்சியான வேடங்களில் நடித்தால் அந்த வாய்ப்பு கிடைக்கும் என்று கூறினார்கள்.ஆனால், அவற்றை தவிர்த்து விட்டதாகவும் கூறுகிறார் சாய் பல்லவி.

கைவசம் எனக்கு மருத்துவ தொழில் இருக்கிறது மருத்துவம் படித்து முடித்துள்ளேன் சினிமா இல்லை என்றால் கிளினிக் வைத்து பிழைத்துக் கொள்வேன். ஆனால், எக்காரணம் கொண்டும் கவர்ச்சியாக மட்டும் நடிக்க மாட்டேன். என்னுடைய மதிப்பை குறைத்துக் கொண்டு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற அவசியம் எனக்கு கிடையாது என அவர் காட்டுகிறார் சாய் பல்லவி.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …