ரிலீசுக்கு முன்பே 1000 கோடி ! புஷ்பாவில் இணையும் சாய்பல்லவி கலக்கல் செய்தி

புஷ்பா – தி ரூல் திரைப்படத்தை சுகுமார்  எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தில் அல்லு அர்ஜுன், ஃபஹத் பாசில், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் அல்லு அர்ஜுனின் புஷ்பராஜ் மற்றும் ஃபஹத் ஃபாசிலின் பன்வர் சிங் ஷெகாவத் இடையேயான மோதல் தான் இந்த முழு படத்தின் கதையே. இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் முட்டம்செட்டி மீடியா நிறுவனம் தயாரித்துள்ளது.

சாய் பல்லவி கடைசியாக விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற கார்கி திரைப்படத்தில் நடித்திருந்தார், மேலும் அவர் அல்லு அர்ஜுனின் புஷ்பா தி ரூல் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக இப்போது செய்திகள் வெளியாகியுள்ளன. தற்போது இவர்  அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்த பான்-இந்திய வெற்றி படமான புஷ்பா – தி ரைஸின் தொடர்ச்சியில் நடிக்கிறார்.

புஷ்பா 2 ஏற்கனவே படப்பிடிப்பு வேளைகளில்  உள்ளது, சாய் பல்லவி விரைவில் இந்த  அணியில் சேர உள்ளார்.  இந்த படத்தில்  சாய் பல்லவியை நீட்டிக்கப்பட்ட கேமியோவில் நடிக்கிறார். ஏற்கனவே படப்பிடிப்பிற்காக 10 நாட்கள் ஒதுக்கியுள்ளார். இப்படத்தில் பழங்குடியின பெண்ணாக அவர் நடிப்பதாக கூறப்படுகிறது.

புஷ்பா 2 படத்தின் டீசர் ஏப்ரல் 8 ஆம் தேதி அல்லு அர்ஜுனின் பிறந்தநாளில் வெளியிடப்படும் என்றும் செய்திகள்  வெளியாகியுள்ளது. இதை அறிந்த ரசிகர்கள்  எதிர்பார்ப்பில் உள்ளார்கள். எப்படியும் டீஸர் வரும் வரை ரசிகர்கள் சும்மா இருக்க மாட்டார்கள். அதனாலேயே இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்படம் அனைத்து மொழிகளிலும் உள்ள திரையரங்கு உரிமைகள் மூலம் ஏற்கனவே 1000 கோடி ரூபாய் வசூலித்துள்ளது என்பது சமீபத்திய செய்தி. இந்த செய்திக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வரவில்லை. புஷ்பா – தி ரைஸ் மூன்று வாரங்களில் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட ரூ.400 கோடி வசூலித்து 2021-ல் அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாக மாறியது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …