பணபலம் … பின்னணி இருந்தால் மட்டும்தான் வெற்றி பெற முடியும் சாய் பல்லவியின் அதிர்ச்சியான பேச்சு…!

 பணம் பாதாளம் வரை பாயும்…  அரசியல் சிபாரிசுகள் மற்றும் வாரிசுகளுக்கு எப்போதுமே அதிக அளவு ஆதரவு இருக்கும் என்பதை அப்பட்டமாக போட்டு உடைத்திருக்கிறார் நடிகை சாய் பல்லவி.

 நடன நிகழ்ச்சியின் மூலம் மிகச் சிறந்த  நடன நாயகி என்ற அந்தஸ்தை இவர் பெறுவதற்காக விஜய் டிவி நடத்திய  ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு இரண்டாவது பரிசை தட்டி வந்தவர்.

 இதன் மூலம் இன்று இவருக்கு பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடிக்க கூடிய பட வாய்ப்பு மற்றும் அந்தஸ்தும் கிடைத்தது.

 தனுசுடன் ரவுடி பேபி பாடலுக்கு வேறு லெவல் டான்ஸ் ஆடி குழந்தைகள் முதல் அனைவரையும் கட்டி போட்டவர் இவர். மேலும் அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய இவர் நடன போட்டிகள் மீது தனக்கு நம்பிக்கை இல்லை வெறுப்பு தான் உள்ளது என்று கூறி இருக்கிறார்.

 இந்த பேச்சைக் கேட்டு பலரும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான உங்களில் யார் அடுத்த  பிரபுதேவா என்ற நிகழ்ச்சியின் மூலம் தான் இவர் சினிமா துறைக்குள் நுழைய முடிந்தது.

 அந்தப் போட்டியில் முதலிடம் பிடித்ததற்கு காரணமாக இருந்தவர் தன்னுடைய பண பலத்தை பயன்படுத்திக் கொண்டது தான் என்று வருத்தத்தோடு கூறியிருக்கிறார்.

இதன் மூலம் எப்போதுமே திறமையானவர்களுக்கு மரியாதை கிடைப்பதில்லை பொதுவாகவே தொலைக்காட்சியில் பணத்திற்கு தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்று கூறி இருப்பது மிகப்பெரிய இடியாக உள்ளது.

இதனால் தான் இவர் நடனப் போட்டிகளை விரும்புவதில்லை என்று கூறியதோடு மட்டுமல்லாமல் வெறுப்பதாகவும் கூறி இருக்கிறார்.

 இதனை அடுத்து பிரபலமான விஜய் டிவியின் பெயரை மென்ஷன் பண்ணாமல் இவர் குறிப்பிட்டு இருப்பது இந்த டிவியை தான் என்பதை அனைவரும் உணர்ந்து கொண்டார்கள்.

 பண பலத்தோடு அரசியல் செல்வாக்கும் இருக்கக்கூடிய நபர்கள் தான் அங்கு எப்போதும் முதலிடத்தில் வர முடியும் என்று அவர் சூசகமாக தெரிவித்துவிட்டார்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …