என்னது சினிமாவை விட்டு வெளியேறி… மருத்துவ சேவையை செய்யப் போகிறாரா சாய் பல்லவி…!!

தென்னிந்திய நடிகைகளில் முன்னனி வரிசையில் இடம் பிடித்து இருப்பவர் சாய் பல்லவி அவர் தற்போது திரைத் துறையை விட்டு விலகி  மருத்துவராக சேவை செய்ய விருப்பம் கொண்டிருப்பதாக தகவல்கள் பரவி வருகிறது.

 சாய் பல்லவி நடனத்தின் மீது தீராத காதல் கொண்டிருந்த காரணத்தால் 2008 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்ற உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நடன நிகழ்ச்சியில் அறிமுகம் ஆகியிருந்தார்.

மேலும் டாக்டர் பட்டத்தை வென்று கோத்தகிரியை பூர்வீகமாகக் கொண்டிருக்கக் கூடிய சாய் பல்லவி கமலஹாசன் தயாரிக்கும் மாவீரன் திரைப்படத்தில் மாஸ் ஹீரோவாக திகழும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக களமிறங்கி இருக்கிறார்.

 மேலும் இவர் 2016 ஆம் ஆண்டு சியார்ச்சியா திபிலீசி  மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மருத்துவர் பட்டம் பெற்றவர். இதனை அடுத்து தற்போது இவர் கோவையில் மருத்துவமனை கட்டி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் இவர் 2015 ஆண்டு வெளிவந்த மாபெரும் வெற்றி  படமான பிரேமம் என்ற மலையாளத் திரைப்படத்தில் தான் மலர் என்ற டீச்சர் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார். அதன் பிறகு சமீபத்தில் வெளியான கார்கில் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய புகழை அடைந்தார்.

தற்போது சொந்தமாக கட்டவுள்ள இந்த மருத்துவமனையில் இவர் மருத்துவராக பணியாற்றுவதால் மிகவும் பிஸியாகி விடுவார், எனவே திரைப்படத்தில் நடிப்பதற்கு இவருக்கு வாய்ப்புகள் கிடைத்தாலும் நேரம் காணாது என்று கூறியிருக்கிறார்கள்.

எனவே இனிமேல் முழு நேர மருத்துவராக இவர் மாறி மக்களுக்கு சேவை புரிய உள்ள நிலையில் எனக்கு பிடித்தமான திரை துறையை விட்டு விலகி விடுவார் என்ற செய்தி இவரது ரசிகர்களுக்கு கடுமையான அதிர்ச்சியை தந்துள்ளது.

எனினும் மலையாள படத்தில் மலர் டீச்சராக வந்து அனைவரின் மனதையும் கவர்ந்து இருக்கக்கூடிய இவர் முழுநேர மருத்துவராக மாறி மக்களுக்கு சேவை செய்ய விரும்புவதை  பல ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …