தனது அபார நடனத் திறமையின் மூலம் கலைஞர் தொலைக்காட்சியில் நடந்த மான் ஆட மயிலாட நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு ரசிகர்களின் மத்தியில் பிரபலமான இடத்தை பிடித்தவர் தான் சாய் பல்லவி [Sai Pallavi]. இதனை அடுத்து திரைப்பட வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர்ந்தது.
அந்த வகையில் இவர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான பிரேமம் என்ற திரைப்படத்தில் மலர் டீச்சராக நடித்து பெருவாரியான ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்து விட்டார்.
தனது அற்புத நடிப்புத்திறனை வெளிப்படுத்தியதன் காரணமாக அடுத்தடுத்த பட வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர்ந்தது. அந்த வகையில் தமிழைப் பொறுத்தவரை என் ஜி கே மாரி 2 உள்ளிட்ட படங்களில் இவர் நடித்திருக்கிறார்.
தமிழ் படங்கள் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளில் நடித்துக் கலக்கும் இவருக்கு என்று அதிகளவு ரசிகர்கள் இருக்கிறார்கள். இவருடைய சிறப்பு அம்சமே இயல்பான நடிப்பு மட்டுமல்லாமல் அதிகளவு மேக்கப் போடாமல் நேச்சுரலாக மேனி அழகை வெளிப்படுத்துவது தான்.
sai pallaviமேலும் இவர் நடிக்கக்கூடிய படங்களில் அதிக அளவு கிளாமர் இருக்காது. படுக்கையறை காட்சிகளோ, முத்த காட்சிகளோ அந்த திரைப்படத்திலிருந்து அவற்றுக்கு நோ என்று சொல்லிவிடும் சாய் பல்லவியின் நடிப்பை பார்க்க வேண்டும் என்பதில் ரசிகர்கள் அனைவரும் ஆர்வமாக இருப்பார்கள்.
இதனை அடுத்து இவர் மாறி படம் இரண்டில் ரவுடி பேபி பாடலுக்கு நடனமாடிய அனுபவத்தை குறித்து பேசி இருக்கிறார். இந்தப் பாடலில் கோடியோகிராபராக செயல்பட்ட பிரபுதேவா மாஸ்டர் என்னை இன்னும் நன்றாக ஆட வேண்டும் என்பதை வலியுறுத்தினார். எனினும் என்னால் எனர்ஜியுடன் ஆட முடியவில்லை.
sai pallaviஅதுமட்டுமல்லாமல் பிரபுதேவா படப்பிடிப்பு தளத்தில் என்னிடம் தனுஷ் எப்படி ஆடுகிறாரோ அவரைப்போல ஆடுங்க என்று கூறினால். அப்பொழுது என்னால் ஆட முடியாது., என்னை போலத்தான் என்னால் ஆட முடியும் என்று கோபத்தில் கத்தி அழுதே விட்டேன் என கூறியிருக்கிறார்.
அதன் பிறகு, தனுஷ் சார் எனக்காக சில அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொண்டார். அதன் பிறகு, ரவுடி பேபி பாடலை படமாக்கினார்கள்.
மேலும், எனது காட்சிகளை தனித்தனியாக ஆட வைத்து எடுத்துக்கொண்டனர். இந்த பாடல் வீடியோ எப்படி வருமோ என ஒருவித அச்சத்துடன் இருந்தேன். ஆனால், பின்னர் இந்த பாடல் வந்ததும் நடனம் பிரமாதமாக இருந்தது என்பதை தற்போது ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.