தமிழ் லில் சின்னத்திரையில் நடன போட்டியாளராக கலந்து கொண்டு ஒரு நடன ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை சாய் பல்லவி.
ஆனால், இவர் மலையாளத்தில் வெளியான பிரேமம் திரைப்படத்தில் நடித்த பிறகு இந்தியா முழுமையும் பிரபலமான நடிகையாக மாறினார். இந்த படத்தை இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்க நடிகர் நிவின் பாலி ஹீரோவாக நடித்திருந்தார்.
இந்த படத்தில் மலர் என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார் நடிகை சாய் பல்லவி. இந்த படத்திற்கு பிறகு இவரை பலரும் மலர் டீச்சர் என்று தங்களுடைய நினைவில் வைத்துக் கொண்டனர்.
அந்த அளவுக்கு இந்த திரைப்படம் இவருக்கு நல்ல வெற்றியை கொடுத்தது. இவருக்கும் தமிழ் சினிமாவுக்கும் ஏழாம் பொருத்தம் போல. ஏனென்றால் இவர் தமிழில் நடிக்கும் படங்கள் எதுவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெறுவது கிடையாது.
ஆனால், தெலுங்கில் இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுகின்றன. சாய் பல்லவி நடித்த படமா..அப்படினா நம்பி போகலாம் என்ற நம்பிக்கை தெலுங்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது.
அந்த அளவுக்கு அழுத்தமான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கும் நடிகை சாய் பல்லவி தற்பொழுது வயதான பெண் போன்ற ஒரு தோற்றத்தில் நடிக்க இருக்கிறார். அந்த தோற்றத்திற்காக முகத்தில் அச்சு எடுக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
இந்த வீடியோவில் ஆடை எதுவும் அணியாமல் வெறும் பிளாஸ்டிக் காகிதத்தை சுற்றி கொண்டு இருக்கையில் அமர்ந்து இருக்கும் நடிகை சாய் பல்லவியின் முகத்தில் அச்சை எடுக்கும் பசைகளை ஊற்றி அவருடைய முகத்தில் அச்சு எடுக்கிறார்கள்.
View this post on Instagram
இந்த வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இது சார்ந்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. மட்டுமில்லாமல் சினிமா குறித்த தன்னுடைய அர்ப்பணிப்பை நடிகை சாய் பல்லவி இந்த வீடியோ மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார் என்று பல ரசிகர்கள் இவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.