மங்களகரமாக பட்டு புடவையில் தஞ்சை பெரிய கோயிலை வலம் வந்த சாய் பல்லவி!

அல்போன்ஸ் புத்திரன்  இயக்கத்தில் மலையாளத்தில் பிரேமம்  இந்த படத்தில் டீச்சர் கேரக்டரில் மிகச்சிறப்பாக நடித்து அனைவரையும் கவர்ந்தவர். நடிப்பதற்கு முன்பாக இவர் உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பெயர் பெற்றவர்.ஃபிடா படத்தின் மூலம் டோலிவுட்டில் அறிமுகமான சாய் பல்லவி  தென்னிந்திய படங்களில் தனக்கென்று தனி முத்திரையைப் பதித்து ரசிகர்களை கொண்டவர்.

நானி ஜோடியாக ஷ்யாம் சிங்கா ராய்,பிரபல தெலுங்கு பட நடிகர் நாக அர்சுனன் மகன் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக லவ் ஸ்டோரி  போன்ற படங்களில் நடித்து தன்னை ஒரு சிறந்த நடிகையாக  வெளிப்படுத்திக் கொண்டார்.

 சமீபத்தில் இவர் நடித்த கார்கி  படமானது   தேச திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டது அவருக்கு மிகவும் பெருமையான ஒரு விஷயமாகும். எல்லா கேரக்டர்களையும் மிகவும் எளியமுறையில் அழகாக நடித்து கொடுப்பது இவருக்கு ஒரு கூடுதல் சிறப்பு.

 கமலஹாசன் மற்றும் ராஜ்குமார் இழந்து இணைந்து வழங்கக்கூடிய திரைப்படத்தில் இவர் நடிக்க உள்ளார். இப்படத்தில் இவருக்கு இணையாக  சிவகார்த்திகேயன் நடிக்கிறார்.

இவர் குடும்பத்தோடு தஞ்சை வந்துள்ளார் தஞ்சை வந்ததோடு மட்டுமல்லாமல் இவர் தஞ்சையில் மாமன்னன் இராசராச சோழன் கட்டிய பிரகதீஸ்வரர் கோவிலுக்கு சென்று அங்கு உள்ள கடவுளை வழிபட்டுள்ளனர்.

திடீரென இவர் தஞ்சை பெரிய கோவில் இருக்கக்கூடிய சிவனை தரிசித்தது ஏதற்கு? அதன் மர்மம் என்ன என்று தெரியவில்லை.

எனினும் அங்கு அவர் சிவப்பு நிற பட்டு புடவையோடு மனதை மயக்கும் மல்லிகை பூக்களை தலை நிறைய வைத்து இருந்து தஞ்சை பெரிய கோயிலின் கோபுரத்தை பார்ப்பதுபோல் இருக்கக்கூடிய புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கிறார்.

இந்த அற்புத சிலையின் அழகை தஞ்சைப் பெரிய கோயில் உள்ள சிற்பங்கள் எல்லாம் நிமிர்ந்து பார்த்து ரசிப்பது போல் இந்த புகைப்படம் இருந்தது.

ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் இத்தகைய இரண்டு அழகுகளையும் பார்க்க கண் கோடி வேண்டும் என்று இவரை சுற்றி ரசிகர்கள் பட்டாளம் கூடிவிட்டது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …