நடிகர் சல்மான்கான் போதைப்பொருளுக்கு அடிமையா? என்ன சொல்கிறார் யோகா குரு ராம்தேவ்…!!

 திரைத்துறை முழுவதுமே போதை பொருட்கள்  விளையாடுகிறது. இதை  நடிகர்கள் மட்டுமில்லாமல் நடிகைகளும் பயன்படுத்தி வருகிறார்கள் என்று மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் யோகா குரு பாபா ராம்தேவ்.

இவர் உத்தரப் பிரதேசத்தில் உள்ள மொராதாபாத் நகரில் போதைப்பொருளுக்கு எதிரான இயக்கத்தின் தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது தான் இந்த மாதிரி பேசி இருக்கிறார்.

 மேலும் அவர் பேசுகையில் நடிகர் சல்மான் கான் போதைப்பொருளை பயன்படுத்தியவர். அதுபோல எனக்கு அமீர்கானை பற்றி தெரியாது. நடிகர் ஷாருக்கானின் பையன் கூட போதைப் பொருளைப் பயன்படுத்தும் போது பிடிபட்டு பின் சிறையில் அடைக்கப்பட்டதை அனைவருக்கும் நினைவிருக்கும் என்று நினைக்கிறேன் என்றார்.

 மேலும் இந்த போதைப் பொருளை எந்த நடிகைகள் பயன்படுத்துகிறார்கள் என்பது கடவுளுக்கு மட்டுமே தெரியும். இந்த போதை வஸ்து திரைத்துறையில் மட்டுமல்ல அரசியலிலும் தற்போது அதிக அளவு பயன்பாட்டில் உள்ளது.

மேலும் இந்த போதைப் பொருளானது தேர்தல் சமயத்தில் மது பானத்தோடு கலந்த  பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் கொடுக்கப்பட்டு வருகிறது.

 ஒவ்வொரு இந்திய குடிமகனும் இது போன்ற போதை வஸ்துக்கள் பயன்படுத்துவதிலிருந்து விடுபட வேண்டும் என்று அவர் கூறினார்.

 அதற்காகவே நாம் ஒரு இயக்கம் தொடங்க வேண்டும் என்று மிகவும் ஆணித்தரமாக யோகா குரு ராம்தேவ் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 இதனை அடுத்து எந்த ஒரு அரசியல் தலைவர்களோ அல்லது நடிகை ,நடிகர்களோ இவரது பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்க கூடிய வகையில் தகுந்த ஆதாரத்தோடு எந்தவிதமான கருத்துக்களையும் தெரிவிக்காத காரணத்தினால் இதில் உண்மை இருக்குமோ என்று மக்கள் எண் எனத் துவங்கி விட்டார்கள்.

எது எப்படியோ ஒவ்வொரு தனி மனிதனும் சுய ஒழுக்கக் கட்டுப்பாடு படி போதைவஸ்துக்கு அடிமையான இருந்தால் தன் வீட்டில் சுகமாக இருப்பதோடு நாட்டையும் சுகமாக வளமான பாதைக்கு எடுத்துச் செல்லலாம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …