நடிகை சமந்தா நடிப்பில், சாகுந்தலம் படம், வரும் 14ம் தேதி ரிலீஸ் ஆகிறது. வரலாற்று கதையம்சம் கொண்ட இந்த படத்தில், ராணியாக நடித்திருக்கிறார் சமந்தா. யசோதா படத்தில் நடித்த பிறகு, மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா, நான்கு மாதங்களுக்கு மேலாக கடுமையாக பாதிக்கப்படார்.
மருத்துவமனையிலும், வீட்டிலும் அவருக்கு பல்வேறு விதமான மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. எனினும் முழுமையான நிலையில், அவர் அந்த நோய் தாக்கத்தில் இருந்து குணமடையவில்லை.
எனினும் விரைவில் ரிலீஸ் ஆக உள்ள சாகுந்தலம் படத்துக்கான புரமோசன் பணிகளில் அவரும் கலந்துகொண்டார். சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய சமந்தா, இன்னும் நல்ல முறையில் படங்களில் நடிக்க விரும்புவதால், ஒத்துக்கொண்ட படங்களை முடித்த பிறகு, சிறிது காலம் முழு ஓய்வில் இருக்கப் போகிறேன், அப்போதுதான், மீண்டும் பழையபடி நல்ல ஆரோக்கியத்துடன், படப்பிடிப்புகளில் பங்கேற்று, நல்ல நடிப்பை தர முடியும், என்று கூறி இருந்தார்.
இ்ந்நிலையில், கேரள மாநிலம், ஆலப்பியில் குஷி தெலுங்கு படத்தின் ஷூட்டிங்கில் சமந்தா பங்கேற்றுள்ளார். தேவரகொண்டா ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தை சிவா நிர்வானா இயக்குகிறார். நடிகர் ஜெயராம், இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இந்த படம், வரும் செப்டம்பர் 1ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.