மீண்டும் … மருத்துவமனையில் நடிகை சமந்தா அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

 தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளோடு ஹிந்தி மொழியிலும் நடித்து வருபவர் நடிகை சமந்தா. இவரை ஒரு பேன் இந்திய நடிகை என்று கூட கூறலாம். அண்மையில் இவருக்கு மையோசைட்டி என்னும் அரிய வகை நோய் உள்ளது என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை அடுத்து எந்த நோய்க்காக தீவிர சிகிச்சை பெற்று வந்து கொண்டிருந்த இவர் சமீபத்தில் வெளிவந்த யசோதா பட ப்ரமோஷனில் கூட  கலந்து கொள்ள முடியாத அளவு இவரது நிலைமை கவலைக்கிடமானது.

மேலும் யூடியூப் ஒன்றுக்கு இவர் பேட்டியை கொடுத்துருந்த விதத்தைப் பார்த்து ரசிகர்கள் அனைவருமே அதிர்ச்சி அடைந்தார்கள்.

 நம்பர் ஒன் நடிகையாக திகழக்கூடிய இவருக்கு இப்படிப்பட்ட ஒரு வியாதி இருக்கிறதா? என்று எண்ணி துயரில் இருக்கும் ரசிகர்கள் இதில் இருந்து மீள முடியாமல் தவித்து வருகின்ற வேளையில் மீண்டும் தற்போது இவரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டதன் காரணமாக ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

 இதனை அடுத்து இவருக்கு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஏற்கனவே மருத்துவமனையில் தங்கி இருந்தபோது திரையுலக பிரபலங்கள் மட்டுமல்லாமல் இவரது இவரது முன்னாள் மாமனார் இவரை சந்தித்து ஆறுதல் கூறிய விஷயம் அனைவரும் அறிந்ததே.

 இவர் தெலுங்கு பிரபல நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்கள் மண வாழ்வில் ஏற்பட்ட கருத்து வேற்றுமை காரணமாக சமீபத்தில் தான் விவாகரத்து பெற்றார்.

மேலும் விவாகரத்து முடிந்த நிலையில் அவ்வப்போது சர்ச்சை மிகு பேச்சுக்கள் வெளிவந்த போதும் அவற்றை எல்லாம் இவர் கண்டுகொள்ளாமல் சினிமாவில் நடிப்பதை மட்டுமே தீவிரமாக கருத்தில் கொண்டு அந்த ஒரு விஷயத்தில் மட்டுமே ஈடுபாடுடன் இருந்து வந்த வேளையில் இது போன்ற உடல்நல குறைவால் இவர் மேலும் மன அழுத்தத்திற்கும் உள்ளாகியுள்ளார்.

 எனவே இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து நடிகை சமந்தா வெளிவர இறைவனை பிரார்த்திப்பதை தவிர வேறு எந்த வழியும் இல்லை. இவர் உடல்நிலை விரைவில் பரிபூரண குணமடைய இறைவனை வேண்டிக் கொள்ளலாம்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …