என்னது …சமந்தாவுக்கு இருக்கும் அந்த அரிய வகை நோய் டிடிக்கும் இருக்கா?

தமிழ்,தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஹிந்தி என பல மொழிகளில் களம் கண்டிருக்கும் நடிகை சமந்தா நடிப்பால் அனைவரையும் கட்டி போட்டு இருக்கிறார் என்று கூறலாம்.

 அதுபோலத்தான் தொகுப்பாளினியாக திகழக்கூடிய டிடி என்கிற திவ்யதர்ஷினியும் தமிழக மக்களின் வீட்டில் ஒரு பெண் பிள்ளையாகவே இன்று வரை திகழ்ந்து வருகிறார்.

விவாகரத்து செய்து கொண்ட இவர்கள் இருவரும் தற்போது ஒரே விதமான நோயால் தாக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற அதிர்ச்சியான செய்தியை அறிந்து ரசிகர்கள் மிகவும் சோகத்தில் உள்ளார்கள்.

நடிகை சமந்தா அடிக்கடி அமெரிக்கா சென்று வந்ததால் இவருக்கு ஏதோ மர்மநோய் உள்ளது என்று வதந்திகள் பரவி இருந்த வேளையில் இவர் தனது இன்ஸ்டால் பக்கத்தில் தனக்கு மையோ சிடிஸ் எனும் ஆட்டோ இம்யுன் பிரச்சனை இருப்பதாக போஸ்ட் செய்திருக்கிறார்.

 அதுமட்டுமில்லாமல் தான் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த கவலையை உருவாக்கி விட்டார். இதனை அடுத்து இவரின் நம்பிக்கைதான் பலரையும் கவர்ந்துள்ளது.

சமந்தா விரைவில் குணமடைந்து மீண்டும் வருவார் என்று திரையுலக பிரபலங்கள் மட்டுமல்லாமல் ரசிகர்களும் தெரிவித்து வந்த நிலையில் மீண்டும் ஒரு அதிர்ச்சியான செய்தியை டிடி வெளியிட்டு இருக்கிறார்.

 சமந்தாவின் இந்த போஸ்டை பார்த்து டிடி என்ன கூறியிருக்கிறார் தெரியுமா? நாம் எல்லாம் ஆட்டோ இம்யூன் வாரியர்கள். நம்மால் இதை வெல்ல முடியும். கமான் ஃபைட் .எங்கள் அனைவருக்காகவும் செய்யுங்கள். ஆட்டோ இம்யூன் பிரச்சனையோடு போராடும் எங்களுக்கு எல்லாம் இன்ஸ்பிரேஷன் ஆக நீங்கள் இருக்கிறீர்கள்.

 எனவே இதையும் நாம் வெல்வோம் என்று கூறியிருக்கிறார். தற்போது இந்த செய்தியை படித்துப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் அக்கா உங்களுக்கு ஆர்தரைட்டை தானே இருக்கிறது. ஆட்டோ இம்யூன் பிரச்சனையுமா உள்ளது.

 நீங்களும் சமத்தாவை போல இதை வென்று விடுவீர்கள் அக்கா. சமந்தாவை நீங்கள் ஊக்குவித்த விதம் மிகவும் சூப்பராக இருப்பதால் நீங்கள் இருவருமே பெண் குல தைரியசாலிகள். எனவே அந்த தெம்பை ஆண்டவன் உங்களுக்கு கொடுத்து உங்களை போராட வைப்பார் என்று கூறி இருப்பது ஒரு மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

 இதை எடுத்து ரசிகர்கள் இன்னார்க்கு இன்னார் என்று…என சோகமான பாடல் வரிகளை ஞாபகப்படுத்தி பாடி வருகிறார்கள். இவர்கள் இருவரும் விரைவில் குணம் அடைய எல்லோரும் இறைவனைப் பிரார்த்திப்பது போல நாமும் பிரார்த்தனை செய்வோம்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …