சமந்தா விற்கு கோவில். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்து வருபவர் சமந்தா. இவர் சென்னையில் 1987 ஆம் ஆண்டு ஏப்ரல் 28ஆம் தேதி பிறந்துள்ளார்.
மேலும் இவர் தனது பள்ளி கல்லூரி படிப்பினை சென்னையில் முடித்துள்ளார். நடுத்தர குடும்ப வர்க்கத்தை சேர்ந்தவர் சிறு வயது முதல் மாடலிங் துறையில் அதை ஆர்வம் காட்டி வந்துள்ளார்.
அதன்படி தனது பள்ளி கல்லூரி நாட்களில் அதிகப்படியான நாடகங்களிலும் கலை நிகழ்ச்சிகளின் கலந்து கொண்டு அனைவரும் அசத்தியுள்ளார்.
35 வயதான சமந்தா தமிழில் விண்ணைத்தாண்டி வருவாயா..? என்ற திரைப்படதில் சிறப்பு தோற்றத்திலும் அதே தெலுங்கு வெர்சனில் கதாநாயகியாகவும் திரை துறையில் அறிமுக அறிமுகமானார். அன்றிலிருந்து இன்று வரை அசைக்க முடியாத கதாநாயகியாக திகழ்ந்துவரும் சமந்தா பல வெற்றிப் படங்களையும் பல முன்னணி கதாநாயகர்களுடனும் சேர்ந்து பணியாற்றியுள்ளார்.
Samanthaமேலும் ஹிந்தி மற்றும் கன்னட மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார். பல விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். இவர் இந்தியா முழுவதும் பிரபலமானவர். மேலும் ஆந்திர மாநிலம் அழைப்பாடு என்ற இடத்தில் வசித்து வரும் சந்திப் என்பவர் சமந்தாவின் தீவிர ரசிகர் ஆவார்.
Samanthaஇவர் இப்பொழுது சமந்தாவிற்கு ஒரு கோயில் ஒன்றை தன் சொந்த செலவில் கட்டியுள்ளார் மேலும் இந்த கோயிலில் சமந்தாவை சிலை வடித்து வைத்துள்ளார்.
இது இந்திய சினிமாத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இதை அறிந்த சமந்தா அந்த வெறித்தனமான ரசிகரை பார்த்தே ஆக வேண்டும் என்று விரைவில் அந்த கோயிலுக்கு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
Samantha
இந்த தகவல் இணையதளத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.இது ஒரு பக்கம் இருக்க படப்பிடிப்பு ஒன்றிற்காக வெளிநாடு சென்றுள்ள நடிகை சமந்தா அங்கு தெருவோரம் இருந்த போன் பூத்தில் இருந்தபடி போன் பேசும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
Samanthaஇதனை பார்த்த ரசிகர்கள், இந்த காலத்திலும் இம்புட்டு பெரிய போன் பூத்தா..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.