மோசமடைந்த சமந்தாவின் உடைல்நிலை.. மீண்டும் மருத்துவ மனையில் அனுமதி..! – அதிர்ச்சி தகவல்கள்..!

நடிகை சமந்தா மயோசைடிஸ் என்ற ஒரு விசித்திரமான நோயினால் பாதிக்கப்பட்டிருப்பது பலருக்கும் தெரிந்திருக்கும். உடல் தசைகளை வலுவிழக்க செய்யும் இந்த நோய் நடிகை சமந்தாவை பாதித்திருக்கிறது.

இதற்கான சிகிச்சையை நடிகை சமந்தா எடுத்து வருகிறார். இந்நிலையில் தான் நடித்த யசோதா என்ற படத்தின் பிரமோஷனில் கலந்து கொண்டு வந்த நடிகை சமந்தா தற்போது மீண்டும் உடல்நிலை மோசமடைந்து இருப்பதாகவும் எனவே மீண்டும் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.

நடிகை சமந்தா உடல்நிலை பாதிக்கப்பட்ட பிறகு படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை பார்த்த ரசிகர்கள் பலரும் மகிழ்ச்சி அடைந்தனர். அவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்தனர். ஆனால், தற்போது மீண்டும் உடல்நிலை மோசமடைந்து இருப்பதை நினைத்து ரசிகர்கள் தன்னுடைய வருத்தத்தை பதிவு செய்து வருகின்றார்கள்.

இந்நிலையில், உடல் நிலை பாதிக்கப்பட்டு இருக்கக்கூடிய நடிகை சமந்தாவிற்கு அவருடைய முன்னாள் கணவர் நாகசைதன்யா போன் செய்து நலம் விசாரித்தார். இதை எடுத்து நாக சைதன்யாவும் சமந்தாவும் மீண்டும் சேர்ந்து வாழ முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.

ஆனால் நடிகை சமந்தா இதுவரை தன்னுடைய விவாகரத்து முடிவு பின்வாங்குதல் குறித்து எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை இப்படி ஒரு வித்தியாசமான நோய் பாதிக்கப்பட்டு இருக்கும் போது ஒரு துணை இருந்தால் அது சிறப்பாக இருக்கும் என்று பலரும் நினைக்கிறார்கள்.

இந்நிலையில் நடிகை சமந்தா குறித்து வெளியாகியிருக்கும் இந்த தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. மேலும் நடிகை சமந்தாவிற்கு அடிக்கடி போன் செய்து அவருடைய உடல்நிலை குறித்து விசாரித்து வருகிறார் நடிகர் நாக சைதன்யா என்ற தகவலும் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …