‘சாகுந்தலம்’ சமந்தா பற்றி ‘தசரா’ கீர்த்தி சுரேஷ் இப்படி சொல்லி இருக்காங்களே?

சமந்தா(Samantha) நடிப்பில், தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியான சாகுந்தலம் படம் திரையில் ஓடிக்கொண்டு இருக்கிறது. அதே போல், வித்யாசமான கதை களத்தில் உருவான ஞானி, கீர்த்தி சுரேஷ் நடித்த தசரா படமும், ரசிகர்களின் பலத்த வரவேற்புடன் திரையில் ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்நிலையில், சமந்தா குறித்து, கீர்த்தி சுரேஷ் சில விஷயங்களை வெளிப்படையாக பேசி, ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளார்

பொதுவாக, சினிமா நடிகர், நடிகையர் இடையே போட்டி நிச்சயமாக உண்டு. அவர்கள் நண்பர்களாக இருந்தாலும், தொழிலில் யார் முதல் வெற்றியாளர் என்பதில் தனிப்பட்ட ஆசை எல்லா கலைஞர்களுக்கும் இருப்பது, தவிர்க்க முடியாதது. இதை வெளிப்படையாகச் சொல்லா விட்டாலும், அவர்களுக்கு நெருக்கமானவர்களுக்கு அது நன்றாகத் தெரியும். அதே போல், ரசிகர்களும் தங்களது அபிமான நடிகரின் படமே வெற்றி பெற வேண்டும் என்பதில் அதிக விருப்பத்தை வெளிப்படுத்துவர்.

Samantha

எம்ஜிஆர் – சிவாஜி, ரஜினி –கமல், விஜய் – அஜித் என, அன்று முதல் இன்று வரை சினிமாவில், ஒருவருக்கு ஒருவர் போட்டியாளர்களாகவே இருந்து வருகின்றனர். அவர்களுக்குள் நண்பர்களாக இருந்தாலும், ஒருவரை விட ஒருவர், திறமையும் வெற்றியும் பேசப்பட வேண்டும் என்பது ஆசை தவிர்க்க முடியாததாக இருக்கிறது.

இதில் நடிகர்கள் மட்டுமல்ல, நடிகைகளுக்குள்ளும் இது அதிகமாக உண்டு. ஆண்களை காட்டிலும், பெண்கள் இதில் அதிக பொசஸீவ்னஸ் கொண்டவர்கள். அலுவலகம், வீடு, அரசியல், சினிமா என எல்லா இடங்களிலும் இது காணப்படுகிறது. இதுவும் தவிர்க்க முடியாதது.
இந்நிலையில், சினிமா துறையில் முன்னணியில் இருக்கும் ஒரு ஸ்டார் நடிகை, அதே போல் முன்னணியில் இருக்கும் ஸ்டார் நடிகையை மனம் திறந்து பாராட்டுவது என்பது, மிகவும் ஆச்சரியம் தரும் விஷயம்தான். இது, சாதாரணம் கிடையாது.

Samantha

ஆனால், நடிகை கீர்த்தி சுரேஷ் இதில் மிக வித்யாசமானவராக இருக்கிறார். சமீபத்தில், நடிகை நயன்தாராவை பாராட்டி பேசி இருந்தார். மாயா படத்துக்கு பிறகு, பெண்களை மையப்படுத்திய கதைகளில் அவர் நடித்த பிறகுதான், மற்ற நடிகைகளுக்கும் பெண் கதாபாத்திரத்தை மையப்படுத்தும் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது என குறிப்பிட்டுச் சொல்லி இருந்தார்.

இந்நிலையில், சமீபத்தில் சமூகவலைதள பக்கத்தில் ஒரு ரசிகர், சமந்தா குறித்து கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ள கீர்த்தி சுரேஷ், ‘நான் வியந்து பார்க்கும் ஒரு நபர் சமந்தா. நான் பார்த்ததில் மிகவும் வலிமையான மனம் கொண்ட நபர்களில் ஒருவர். எளிமையாக சொல்ல வேண்டும் என்றால், அவர் ஒரு தடைகளை கடந்து ஜெயிப்பவர் என்று கீர்த்தி சுரேஷ் பதில் அளித்துள்ளார்.

keerthy suresh

அதாவது, திருமண வாழ்வில் கருத்துவேறுபாடு காரணமாக சமந்தா கணவரை பிரிந்தார். படங்களில் நடித்து வந்த நிலையில், வெற்றி தோல்விகள் மாறி மாறி வந்தது. இந்நிலையில், தோல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா, படங்களில் நடித்து வருகிறார். இப்போது, அவர் நடித்த சாகுந்தலம் படம் வெளியாகி இருக்கிறது. எனினும், அந்த நோயில் இருந்து முற்றிலும் குணமாகாத சமந்தா, ஒப்பந்தமான படங்களில் பல்வேறு உடல் சிரமங்களுக்கு இடையிலும் நடித்துக்கொண்டு இருக்கிறார்.

Samantha

நோய் பாதிப்பு உடல் ரீதியாக தரும் சிரமங்களை பொருட்படுத்தாமல் உழைப்பதில் தீவிர ஆர்வமும், அக்கறையும் காட்டுகிறார். அடிக்கடி தனது நலம் விரும்பும் ரசிகர்களுக்கு, தன்னம்பிக்கையான பதிவுகளை பதிலாக தந்து, அவர்களை தெம்பூட்டுகிறார். அந்த வகையில், கீர்த்தி சுரேஷ், சக நடிகையான சமந்தாவின் இந்த நல்ல குணங்களை, தன்னம்பிக்கையை பாராட்டும் விதமாக இந்த கருத்தை பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு, தொடர்ந்து தமிழகம் இணையத்தை படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …