கலங்கி அழுது முகத்திற்கு நேராக சொன்ன சமந்தா…. திகழ்த்து போய் நின்ற நாகார்ஜுனா!

தெலுங்கு சினிமாவில் பிரபலமான ஸ்டார் ஹீரோவாக இருந்து வருபவர்தான் நாகார்ஜுனா. இவரது மகன்தான் நாக சைதன்யா.

தெலுங்கு சினிமாவில் பிரபல இளம் நடிகராக வலம் வந்து கொண்டு இருந்தார். பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து அங்கு தலைக்கன தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருக்கிறார்.

சமந்தா – நாக சைதன்யா காதல்:

நாகசைதன்யாவுக்கு குறிப்பாக பெண்கள் ரசிகர்கள் மிக அதிகம் என்று சொல்லலாம். இவர் சமந்தாவுடன் இணைந்து ஹேமாயா சேஷாவே திரைப்படத்தில் நடித்தார்.

இப்படத்தின் மூலமாக இருவருக்கும் ஏற்பட்ட நெருக்கம் பின்னாளில் அது காதல் ஆக்கு மாறியது.

பின்னர் கிட்டத்தட்ட எட்டு வருட காதலுக்கு பிறகு பெற்றோர்கள் சம்மதத்துடன் மிகவும் பிரம்மாண்டமாக 2017 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள் .

இந்த திருமண வாழ்க்கை கிட்டத்தட்ட நான்கு வருடத்திலேயே முடிவுக்கு வந்துவிட்டது. திடீரென இருவருக்கும் மேற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்கள்.

இவர்களின் விவாகரத்து ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. ரசிகர்களின் ஃபேவரட் ஜோடியாக பார்க்கப்பட்ட இவர்களின் விவாகரத்து அவர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை .

இதனுடைய மையோ சிட்டிஸ் நோயால் மிகவும் பாதிக்கப்பட்ட நடிகை சமந்தா உயிருக்கு போராடி அதிலிருந்து மீண்டு வந்தார் .

மயோசிட்டிஸ் தாக்கம்:

நோயால் பாதிக்கப்பட்டு இருந்த அவர் திரைப்படங்களில் நடிக்க கவனம் செலுத்த முடியாததால் முழுக்க முழுக்க சிகிச்சை என ஓடிக்கொண்டே இருந்ததால் பட வாய்ப்புகள் சரியாக அமையவில்லை.

இதனுடைய சாகுந்தலம், குஷி என்ற இரண்டு தோல்வி படங்களில் நடித்த சமந்தாவுக்கு மார்க்கெட் சர்ர்ன்னு சறுக்கி போனது.

இதனால் நான் இனிமேல் படங்களில் நடிக்க போவதில்லை. குட்டி பிரேக் எடுத்துக் கொள்ளப் போகிறேன் எனக்கூறி வாங்கிய அனைத்து பணத்தையும் சமந்தா திருப்பிக் கொடுத்து விட்டார்.

மயோசிட்டிஸ் நோய்க்கு சிகிச்சை எடுத்து பின்னர் அதிலிருந்து தேறி வந்து தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இப்படியான சமயத்தில் நாக சைதன்யா பிரபல நடிகையான சோபிதா துலி பலாவை காதலித்து இரண்டாவது திருமணமாக தற்போது நிச்சயதார்த்தம் செய்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் தற்போது பிரபல பத்திரிகையாளரான சேக்குவாரா சமீபத்திய பேட்டி ஒன்றிய நடிகை சமந்தாவின் விவாகரத்து விஷயம் குறித்து பேசினார்.

நாகர்ஜூனாவிடம் கலங்கி அழுத சமந்தா:

அப்போது சமந்தாவை விவாகரத்து செய்ய முடிவெடுத்த உடனேயே நாகார்ஜுனா வீட்டிலிருந்து சமந்தாவுக்கு ஜீவனாம்சமாக ரூபாய் 200 கோடி கொடுப்பதாக தயாராக இருந்தார்கள்.

ஆனால் சமந்தா அந்த பணம் எனக்கு தேவையில்லை நான் ரூ.100 … ரூ. 500க்கு எல்லாம் கடைகளில் வெல்கம் கால் ஆக நின்று வேலை பார்த்து தான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன்.

எனவே எனக்கு தன்மானமும்…. தன்னம்பிக்கையும் அதிகமாக இருக்கிறது. எனக்கு உங்கள் பணம் தேவையில்லை என முகத்திற்கு அடித்தார் போல் நேராகவே நாகார்ஜுனாவிடம் கண்கலங்கி கூறிவிட்டு வந்தாராம் நடிகை சமந்தா .

இந்த வார்த்தையை கேட்டு நாகார்ஜுனா அடுத்த வார்த்தை பேச முடியாமல் திகைத்துப் போய் நின்றாராம் தற்போது இந்த செய்தியை சேகுவாரா கூற டோலிவுட் மட்டும் கோலிவுட்டில் மிகவும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இப்படி ஒரு குணம் கொண்ட சமந்தாவை நாக சைத்தன் மிஸ் பண்ணிட்டார் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …