அட பாவமே … என்ன சமந்தாவின் உடல் நிலையில் முன்னேற்றம் இல்லையா? அடுத்த கட்ட சிகிச்சைக்கு ரெடியாகிவிட்டாரா?

தமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகில் டாப் லெவலில் இருக்கக்கூடிய நடிகை தான் நடிகை சமந்தா. இவர் தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

நல்ல முறையில் இவர்கள் மணவாழ்க்கை சென்று கொண்டிருந்த வேளையில் இருவருக்கும் இடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு சமீபத்தில் பிரிந்து ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

 இந்த நிலையில் இவர் மனம் தளர்ந்து இருந்த போது நண்பர்களின் உதவியுடன் தான் மீண்டு வந்து இருப்பதாக பல பேட்டிகளில் கூறி இருக்கக்கூடிய இவருக்கு மயோசிடிஸ்  என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக சமூக வலைத்தளங்களில் அறிவித்தார்.

 மேலும் இந்த நோயை விரட்டி அடிப்பதற்காக சிகிச்சைகளை மேற்கொண்டு வந்த இவருக்கு எந்த முடிவும் முன்னேற்றமும் கிடைக்காததால் தற்போது அதிரடி முடிவை எடுத்திருப்பதாக தெரிகிறது.

 தனது பர்சனல் லைப்பில் மிகப்பெரிய சரிவை சந்தித்த இவருக்கு உஊ சொல்றியா மாமா என்ற பாடல் மூலம் மிகப்பெரிய புகழை அடைந்தார். இதனை எடுத்து இவரது ரசிகர்கள் இவரை பிரம்மாண்டமாக கொண்டாடினார்கள்.

 மேலும் தற்போது இவர் நடித்து திரைக்கு வந்திருக்கும் யசோதா திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

இந்த படத்தின் பிரமோஷனுக்கு கூட தன்னால் எந்தவித வகையிலும் உதவி செய்ய முடியவில்லை அதற்கு உடல் நிலையும் ஒத்துழைக்கவில்லை என்று ஒரு பேட்டியில் மிகவும் அழுத நிலையில் நிலையை விலக்கி இருந்தார்.

 இந்த சூழ்நிலையில் ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சமந்தாவின் உடல்நிலையில் மேலும் முன்னேற்றங்கள் ஏற்படுவதற்கு தாமதம் ஆகி வருவதால் திடீரென்று சிகிச்சை முறையை அவர் மாற்றி இருக்கிறார்.

 அதன்படி வீட்டில் ஓய்வில் இருக்கும் சமந்தா மருத்துவர்கள் அறிவுரைப்படி ஆயுர்வேத சிகிச்சையை பெற்று வருகிறார்.மேலும் இந்த ஆயுர்வேத சிகிச்சையானது தற்போது நல்ல பலனை அளித்திருப்பதாகவும் இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உள்ளதாகவும் கூறி இருக்கிறார்.

 இதனை எடுத்து இவரது ரசிகர்கள் இவர் விரைவில் நலம் பெற வேண்டும் என்று இறைவனை பிரார்த்தித்து வருவதாக கூறியிருக்கிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …